சினிமாவாகும் ஹஸாரே உண்ணாவிரத போராட்டம்

நல்ல பரபரப்பான கதை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அன்னா ஹஸாரே சூழ்ச்சிகள், திருப்பங்கள், சதிகள் நிறைந்த ஒரு நல்ல கதையைக் கொடுத்துவிட்டார். அதை வைத்து படம் காட்டத் தயாராகிவிட்டார்கள்.
பிரபல மராத்தி இயக்குநர்கள் சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் ஆகியோர் ஹஸாரேயின் போராட்டத்தை மராத்தி சினிமாவாக தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு 'அந்தோலன் ஆக் தாஹா திவாஸ்' (பத்து நாள் போராட்டம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் கூறும் போது, "நாடு கண்ட, அரசியல் சார்பற்ற முதலாவது போராட்டம் இது. லஞ்ச ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களைச் சந்திக்கிற ஒரு மத்தியதர குடும்பத்தினை சுற்றி இந்தப் படம் செல்கிறது. ஆத்ம பரிசோதனையையும், தனி மனித வாழ்வின் ஒழுக்கத்தினையும் இந்தப் படம் மையப்படுத்திக்காட்டும்'' என்றனர்.


Click it and Unblock the Notifications











