Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தெலுங்கில் 'ஹிட்டான' ஆயிரத்தில் ஒருவன்!
ரூ 32 கோடி செலவில் தயாரான ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழில் பார்த்தவர்கள் ஆளுக்கு ஒரு கதையைச் சொன்னார்கள். சிலர் அந்தப் படத்தை ஈழத்தின் கதை என்றெல்லாம் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டார்கள். இதைவிடக் கொடுமை, படத்தின் கதை இதுதான் என்று பிரஸ் ரிலீஸ் அடித்துக் கொடுத்தார் இயக்குநர் செல்வராகவன்.
வித்தியாசமான கதைக் களம் என்றாலும் பெரும்பான்மை ரசிகர்களுக்குப் பிடிக்காததால், இந்தப் படம் தமிழில் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு. 2010ம் ஆண்டில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்களில் முதலிடத்தில் உள்ளது ஆயிரத்தில் ஒருவன்.
இந்த நிலையில், இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு யுகானிக்கி ஒக்கடு (யுகத்துக்கு ஒருவன்) என்ற பெயரில் ஆந்திராவில் ரிலீஸானது. ஆனால் முன்கூட்டியே, படத்தின் அருவருப்பான காட்சிகள், குழப்பமான காட்சிகள் அனைத்தையும் வெட்டியெறிந்துவிட்டு 2 மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக வெளியிட்டனர்.
கடந்த 5ம் தேதி வெளியான இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது. முதல் நான்கு நாட்களில் ரூ 2 கோடி வசூல் செய்துவிட்டதாக 'பாக்ஸ் ஆபீஸ்' தகவல்கள் கூறுகின்றன.
விட்டதைப் பிடித்த நிம்மதியில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பழையபடி மிடுக்குடன் நடமாட ஆரம்பித்துள்ளார்.
இந்த வெற்றியை கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, செல்வராகவன், ரவீந்திரன் ஆகிய ஐந்து பேரும் ஆந்திர தியேட்டர்களில் நேரில் தோன்றி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தை அவசரம் அவசரமாக ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். கார்த்தியே சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறாராம்.