நெஞ்சில்.. ஜில் ஜில் அபர்ணா ஃபெயிலியர் நாயகியாக மாறி விட்ட அபர்ணாவுக்கு , அந்த கெட்ட பெயரை துடைத்தெறியும் வகையில்உருவாகப் போகிறது நெஞ்சில் .. ஜில் ஜில்.புதுக்கோட்டையிலிருந்து சரவணனுக்குப் பிறகு அபர்ணா நடித்த ஒரு படமும் பேசப்படவில்லை. போன வருடம்வெளியான ஏபிசிடி படத்தில் அபர்ணாவின் கேரக்டர் பேசப்பட்டாலும் கூட படம் சரியாக போணியாகாமல்,தோல்விப் பட நாயகி என்ற பெயரை அபர்ணாவுக்குத் தேடித் தந்தது.தொடர்ந்து தோல்விப் படங்களையேத் தந்ததால், அபர்ணாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி கையில் படங்கள்இல்லை. மலையாளத்தில் சில படங்களை முயற்சித்துப் பார்த்த அபர்ணா, அங்கும் தேற முடியாமல் மீண்டும்கோலிவுட்டில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.இந்த சமயத்தில்தான் அவருக்கு நெஞ்சில் .. ஜில் ஜில் பட வாய்ப்பு வந்தது. வெற்றிப் படங்கள் பலவற்றைக்கொடுத்த இயக்குநர் செல்வாவின் கைவண்ணத்தில் இப்படம் உருவாகிறது. அறிந்தும் அறியாமலும் படத்தில்ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த நவ்தீப், அபர்ணாவுக்கு ஜோடியாக இதில் வருகிறார்.முற்றிலும் இளமைத் துள்ளலுடன் இப்படத்தை எடுக்கப் போகிறார் செல்வா. இன்றைய இளசுகளின் நாடித்துடிப்புக்கேற்ற அத்தனை ஐட்டங்களும் படத்தில் இருக்குமாம். பட பூஜையின்போதே அதை சிம்பாலிக்காகவெளிப்படுத்தியிருந்தார்கள்.நவ்தீப்பும், அபர்ணாவும் இணைந்து போஸ் கொடுத்திருந்த விதம் விதமான ஸ்டில்கள் பூஜை நடந்த இடத்தைஅமர்க்களப்படுத்தியிருந்தன. நவ்தீப்புடன் படு நெருக்கமாக அபர்ணா கொடுத்திருந்த போஸ்கள், படத்தின்கதையோட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.ஜில் என்று டைட்டில் வைத்து விட்டு படம் அத்தனையும் படு சூடாக இருந்ததைப் பார்த்து பூஜைக்கு வந்தவர்கள்குளிர்ந்து போனார்கள். வழக்கமான காதல் கதைதான் என்றாலும் இதில் சற்று வித்தியாசப்படுத்திகாட்டியிருக்கிறாராம் செல்வா.ஸ்டில்களில் மட்டும் அனைவரையும் கவரவில்லை அபர்ணா, தொப்புள் தெரிய இறக்கிக் கட்டியிருந்த சேலையில்படு தூக்கலாக தெரிந்து, வந்திருந்தவர்களின் விழிகளை தனது சேலை மடிப்பில் வழித்துப் போட்டு மயக்கிக்கொண்டிருந்தார்.படத்தில் ஏகப்பட்ட கிளாமர் இருக்கும் போலருக்கே என்று அபர்ணாவை ஓரம் கட்டியபோது, கிளாமர் உண்டு,தேவையான அளவு என்று தனது கருப்பு உதடுகள் சிவக்க சொன்னார். சேலையிலும் கிளாமரை தூக்கிக் காட்டமுடியும் என்பது போல வந்திருந்த அபர்ணாவை, பூஜைக்கு வந்த பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் வளைத்துவளைத்துச் சுட்டனர். அப்புவும் சளைக்காமல் போஸ் கொடுத்தார். இதற்கு முன்பு செய்ததைப் போல இந்தப் படத்திற்கும் கொஞ்சம் போல பைனான்ஸ் செய்கிறாராம் அபர்ணா.பூஜைக்கு வந்திருந்தவர்களில் இன்னொரு முக்கியஸ்தர் நடிகை ரஞ்சிதா. இன்னும் இளமை மிச்சமிருக்குஎன்பதைக் காட்டும் வகையில் அம்மணியும் அம்சமாக வந்திருந்தார். அவருடன் பல படங்களில் ஜோடி போட்டசத்யராஜ் தனது புத்திரன் சிபியுடன் வந்திருந்தார். புள்ளையுடன் வந்திருந்தாலும், பூஜைக்கு வந்திருந்த ரஞ்சிதா,அபர்ணாவுடன் ஜாலியாக பேச தவறவில்லை சத்யராஜ்!
ஃபெயிலியர் நாயகியாக மாறி விட்ட அபர்ணாவுக்கு , அந்த கெட்ட பெயரை துடைத்தெறியும் வகையில்உருவாகப் போகிறது நெஞ்சில் .. ஜில் ஜில்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணனுக்குப் பிறகு அபர்ணா நடித்த ஒரு படமும் பேசப்படவில்லை. போன வருடம்வெளியான ஏபிசிடி படத்தில் அபர்ணாவின் கேரக்டர் பேசப்பட்டாலும் கூட படம் சரியாக போணியாகாமல்,தோல்விப் பட நாயகி என்ற பெயரை அபர்ணாவுக்குத் தேடித் தந்தது.
தொடர்ந்து தோல்விப் படங்களையேத் தந்ததால், அபர்ணாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி கையில் படங்கள்இல்லை. மலையாளத்தில் சில படங்களை முயற்சித்துப் பார்த்த அபர்ணா, அங்கும் தேற முடியாமல் மீண்டும்கோலிவுட்டில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில்தான் அவருக்கு நெஞ்சில் .. ஜில் ஜில் பட வாய்ப்பு வந்தது. வெற்றிப் படங்கள் பலவற்றைக்கொடுத்த இயக்குநர் செல்வாவின் கைவண்ணத்தில் இப்படம் உருவாகிறது. அறிந்தும் அறியாமலும் படத்தில்ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த நவ்தீப், அபர்ணாவுக்கு ஜோடியாக இதில் வருகிறார்.
முற்றிலும் இளமைத் துள்ளலுடன் இப்படத்தை எடுக்கப் போகிறார் செல்வா. இன்றைய இளசுகளின் நாடித்துடிப்புக்கேற்ற அத்தனை ஐட்டங்களும் படத்தில் இருக்குமாம். பட பூஜையின்போதே அதை சிம்பாலிக்காகவெளிப்படுத்தியிருந்தார்கள்.
நவ்தீப்பும், அபர்ணாவும் இணைந்து போஸ் கொடுத்திருந்த விதம் விதமான ஸ்டில்கள் பூஜை நடந்த இடத்தைஅமர்க்களப்படுத்தியிருந்தன. நவ்தீப்புடன் படு நெருக்கமாக அபர்ணா கொடுத்திருந்த போஸ்கள், படத்தின்கதையோட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
ஜில் என்று டைட்டில் வைத்து விட்டு படம் அத்தனையும் படு சூடாக இருந்ததைப் பார்த்து பூஜைக்கு வந்தவர்கள்குளிர்ந்து போனார்கள். வழக்கமான காதல் கதைதான் என்றாலும் இதில் சற்று வித்தியாசப்படுத்திகாட்டியிருக்கிறாராம் செல்வா.
ஸ்டில்களில் மட்டும் அனைவரையும் கவரவில்லை அபர்ணா, தொப்புள் தெரிய இறக்கிக் கட்டியிருந்த சேலையில்படு தூக்கலாக தெரிந்து, வந்திருந்தவர்களின் விழிகளை தனது சேலை மடிப்பில் வழித்துப் போட்டு மயக்கிக்கொண்டிருந்தார்.
படத்தில் ஏகப்பட்ட கிளாமர் இருக்கும் போலருக்கே என்று அபர்ணாவை ஓரம் கட்டியபோது, கிளாமர் உண்டு,தேவையான அளவு என்று தனது கருப்பு உதடுகள் சிவக்க சொன்னார். சேலையிலும் கிளாமரை தூக்கிக் காட்டமுடியும் என்பது போல வந்திருந்த அபர்ணாவை, பூஜைக்கு வந்த பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் வளைத்துவளைத்துச் சுட்டனர். அப்புவும் சளைக்காமல் போஸ் கொடுத்தார்.
இதற்கு முன்பு செய்ததைப் போல இந்தப் படத்திற்கும் கொஞ்சம் போல பைனான்ஸ் செய்கிறாராம் அபர்ணா.
பூஜைக்கு வந்திருந்தவர்களில் இன்னொரு முக்கியஸ்தர் நடிகை ரஞ்சிதா. இன்னும் இளமை மிச்சமிருக்குஎன்பதைக் காட்டும் வகையில் அம்மணியும் அம்சமாக வந்திருந்தார். அவருடன் பல படங்களில் ஜோடி போட்டசத்யராஜ் தனது புத்திரன் சிபியுடன் வந்திருந்தார். புள்ளையுடன் வந்திருந்தாலும், பூஜைக்கு வந்திருந்த ரஞ்சிதா,அபர்ணாவுடன் ஜாலியாக பேச தவறவில்லை சத்யராஜ்!
படத்தில் வடிவேலுவும் உள்ளார். இமான் இசையமைக்கிறார், செந்தில்குமார் கேமராவை முடுக்குகிறார்.
பூஜை போட்ட கையோடு, படத்தின் பாடல் காட்சிக்காக சமீபத்தில் லண்டனுக்குப் போய் வந்திருக்கிறார்கள்அபர்ணா, நவ்தீப், அண்ட் டீம்.


Click it and Unblock the Notifications