twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரிய ஆளா வருவார்- நடிகர் ஜெய்யைப் பாராட்டிய முருகதாஸ்!

    By Shankar
    |

    AR Murugadass and Jai
    சென்னை: எங்கு பார்த்தாலும் ராஜா ராணி பட செய்தியாக இருப்பது போல பார்த்துக் கொள்கிறார்கள் அந்தப் படத்தின் குழுவும் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவும்!

    அடுத்து இன்னொரு ராஜா ராணி செய்தி. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜெய்யை, படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் முருகதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த பின்னர் ஜெய் பற்றி முருகதாஸ் கூறியதாவது:

    என்னுடைய தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்திலேயே ஜெய்-ன் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான, திறமையான நடிகர் அவர்.

    என்னுடைய கணிப்பின்படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர். நிச்சயம் பிரகாசிப்பார். 'ராஜா ராணி' படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கென உருவாக்கப்பட்டதுபோல் பொருத்தமாக உள்ளது," என்றார்.

    'ராஜா ராணி' படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நஸீம், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜெய்க்கு சிறப்பு வேடம். மவுன ராகம் கார்த்திக் மாதிரி என்கிறார்கள்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து 'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்திலும் நடித்துள்ளார் ஜெய்.

    English summary
    Director AR Murugadass praised actor Jai as a professional and honest artist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X