For Daily Alerts
Don't Miss!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
ஆர்த்தி-அருண்குமார் நடிகர் விஜயக்குமாரின் மகன் நடிகர் அருண் குமாருக்கும் மதுரையைச் சேர்ந்தஆர்த்திக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் மீனா, சத்யராஜ்,பி.வாசு, சீதா, ஸ்ரீபிரியா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுவாழ்த்தினர்.விஜயக்குமாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு.இரண்டாவது மனைவி தான் நடிகை மஞ்சுளா. முத்துகண்ணுவுக்கு ஒரே மகன்அருண்குமார். மஞ்சுளாவுக்கு எல்லாம் மகள்களே. இவரது குடும்பம் தான்கோலிவுட்டில் கலைக் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.அருண்குமார் பிரியம் படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால்,எடுபடவில்லை. ஆனாலும் தொடர்ந்து பாண்டவர் பூமி, ஜனனம் ஆகிய படங்களிலும்சமீபத்தில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது உள்ளிட்ட பல படங்களில்நடித்துள்ளார். தொடர்ந்து நடிக்கிறார்.அருண்குமாருக்கு மதுரையைச் சேர்ந்த டாக்டர் மோகன்-சுசீலா தம்பதியினரின்மகளுமான ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது.இந்தத் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் சென்னை தி.நகரில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் நடந்தது.முத்துக்கண்ணுவும், அருண்குமாரையும் தனது மகனாகவே பாவிக்கும் மஞ்சுளாவும்அவரது மகள்களும் தந்தை விஜய்குமாருடன் இணைந்து நிச்சயதார்த்தை மிகச்சிறப்பாக நடத்தினர்.முத்துக்கண்ணுவை அம்மா என்றும் மஞ்சுளாவை மம்மி என்றும் அழைத்தபடிஉற்சாகமாக வலம் வந்தார் மாப்பிள்ளை அருண்குமார்.மகனை நிச்சயித்துத் தரும் நிகழ்ச்சியில் விஜய்குமாருக்கு இரு புறமும்முத்துக்கண்ணுவும் மஞ்சுளாவும் அமர்ந்து சம்பிரதாய சடங்குகளை செய்தனர்.ஜோதிகா-சூர்யா திருமணம் முடிந்த நிலையில் அடுத்ததாக திருமண பந்தத்தில்நுழைகிறார் அருண்குமார்.
Specials
-Staff
By Staff
|
விஜயக்குமாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு.இரண்டாவது மனைவி தான் நடிகை மஞ்சுளா. முத்துகண்ணுவுக்கு ஒரே மகன்அருண்குமார். மஞ்சுளாவுக்கு எல்லாம் மகள்களே. இவரது குடும்பம் தான்கோலிவுட்டில் கலைக் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.
அருண்குமார் பிரியம் படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால்,எடுபடவில்லை. ஆனாலும் தொடர்ந்து பாண்டவர் பூமி, ஜனனம் ஆகிய படங்களிலும்சமீபத்தில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது உள்ளிட்ட பல படங்களில்நடித்துள்ளார். தொடர்ந்து நடிக்கிறார்.
அருண்குமாருக்கு மதுரையைச் சேர்ந்த டாக்டர் மோகன்-சுசீலா தம்பதியினரின்மகளுமான ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் சென்னை தி.நகரில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
முத்துக்கண்ணுவும், அருண்குமாரையும் தனது மகனாகவே பாவிக்கும் மஞ்சுளாவும்அவரது மகள்களும் தந்தை விஜய்குமாருடன் இணைந்து நிச்சயதார்த்தை மிகச்சிறப்பாக நடத்தினர்.
முத்துக்கண்ணுவை அம்மா என்றும் மஞ்சுளாவை மம்மி என்றும் அழைத்தபடிஉற்சாகமாக வலம் வந்தார் மாப்பிள்ளை அருண்குமார்.
மகனை நிச்சயித்துத் தரும் நிகழ்ச்சியில் விஜய்குமாருக்கு இரு புறமும்முத்துக்கண்ணுவும் மஞ்சுளாவும் அமர்ந்து சம்பிரதாய சடங்குகளை செய்தனர்.
ஜோதிகா-சூர்யா திருமணம் முடிந்த நிலையில் அடுத்ததாக திருமண பந்தத்தில்நுழைகிறார் அருண்குமார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor arunkumar to get married
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004