Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாம் பிரிந்துவிடுவோம் என்று திருமணம் ஆனபோதே சரியாக ஜோசியம் சொன்னார் ராமராஜன்... நளினி உருக்கம்
சென்னை: நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்தபோது சினிமாவில் நடன கலைஞர்களாக இருந்த நளினியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குடும்ப எதிர்ப்பை மீறி திருப்பதியில் ரகசிய திருமணம் செய்தவர்கள் சென்னையில் எம்.ஜி.ஆரிடம் பாதுகாப்பு கொடுக்கும்படி தஞ்சமடைந்தார்கள்
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திருமண வரவேற்பை நடத்தி வைத்து பாதுகாப்பும் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் அவர்கள் பிரிந்து விட்டனர்.
வேகம்..வேகம்..வேகமாய் முடிந்துபோன பால் வால்க்கரின் வாழ்க்கை..கடைசி சோக நிமிடங்கள்
ஒரு தலை காதல்
நளினி ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சில படங்களில் ராமராஜன் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அப்போதே வசனம் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் தன்னுடைய காதலை பட்டும் படாமல் வெளிக்காட்டியுள்ளார். பொதுவாக நடிகர்கள் உதவி இயக்குநர்களிடம் கலகலப்பாக கிண்டலடித்து பேசுவார்கள். நளினியும் அந்த சமயத்தில் தன்னுடன் நடித்த வேறொரு நடிகையுடன் சேர்ந்து கொண்டு ராமராஜனை கலாய்த்துள்ளாராம்.
திருமணம்
ஒரு கட்டத்தில் பெண் கேட்டு ராமராஜன் நளினி வீட்டிற்கு செல்லவே அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் காலப்போக்கில் அடிதடியில் முடிந்ததாம். பின்னர் ஒரு வருடம் நளினியை கேரளாவிற்கு அழைத்துச் சென்று மலையாள படங்களில் மட்டுமே நடிக்க வைத்துள்ளனர். அதன் பின்னர் நளினி ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமானபோதுதான் ராமராஜன் நளினியை ரகசியமாக திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் முடித்திருக்கிறார்.
விவாகரத்து
இப்படி பல சவால்களை சந்தித்து எம்.ஜி.ஆர் திருமண வரவேற்பை நடத்தி பாதுகாப்பு கொடுத்து சேர்த்து வைத்த தம்பதி 13 ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டனர். அவர்களுக்கு அருணா என்ற பெண்ணும் அருண் என்ற ஆணும் இரட்டை குழந்தைகளாக பிறந்தார்கள். ராமராஜன் நன்றாக ஜோசியம் பார்ப்பார் என்று நளினி சமீபத்தில் கூறியுள்ளார்.
ராமராஜன் ஜோசியம்
திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே சில விஷயங்கள் நடக்கும் என்று ஜோசியம் பார்த்து கூறிவிட்டாராம். அதாவது நமக்கு பிறக்கப் போகும் குழந்தைகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று இருந்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் பிரிந்து விடுவோம். மகன் வளர வளர என்னுடைய புகழ் குறைந்து கொண்டே போகும் என்று கூறினாராம். இதெல்லாம் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்டால் இல்லை நடக்கும் என்றாராம். அதே போல ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் இருப்பதா இல்லை அவருடன் இருப்பதா என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது நான் குழந்தைகளுடன் இருந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். அருகில் இருந்து எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வதை விட இப்போது தூரத்தில் இருப்பதால் முன்பு போலவே காதலர்களாகவே காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்