மீண்டும் இணையும் பாலா - விஷால்!

நடிகர் விஷாலை ஒரு நல்ல நடிகராக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை பாலாவுக்கு உண்டு.
அவன் இவன் படத்தில் ஒன்றரைக் கண்ணுடன் பன்முக பரிமானத்தை அவர் காட்டியிருந்தார்.
இப்போது 'சமர்', 'மத கத ராஜா' என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால், இப்படங்கள் முடிவடைந்த பிறகு பாலாவுடன் இணைகிறார்.
இயக்குனர் பாலா தற்போது அதர்வா முரளியை வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் விஷாலுக்கான படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
இந்தப் புதிய படம், விஷாலுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தரும் அளவுக்கு அமையும் என பாலா கூறி வருகிறாராம்!


Click it and Unblock the Notifications











