twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் கடவுள்-ஆகஸ்டில் ஷூட்டிங் அஜீத் விலகி விட்ட நிலையில், பாலாவின் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில்உருவாகும் நான் கடவுள் படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக ஆகஸ்ட் 15ம் தேதிதொடங்கவுள்ளது.பிதாமகனுக்குப் பிறகு கல்யாணம் செய்து கொண்டு ரிலாக்ஸ் ஆன பாலா புதிய படம்தொடர்பான முயற்சிகளில் இறங்கினார். நான் கடவுள் என்று பெயரிடப்பட்டபாலாவின் புதிய படத்தில் முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது.கிட்டத்தட்ட ஷூட்டிங்குக்குப் போகும் அளவுக்கு எல்லாம் தயாராகி விட்ட நிலையில்திடீரென ஷூட்டிங்கை ஆரம்பிக்காமல் கதையை ஸ்டெடி செய்யப் போய் விட்டார்பாலா.இதனால் கிடைத்த கேப்பில் பரமசிவன், திருப்பதி என இரண்டு படங்களில் நடித்துமுடித்து விட்டார் அஜீத். அப்புறம் பாலா படத்தை ஆரம்பிக்கிற வழியாகத்தெரியாத காரணத்தால், படத்திலிருந்து விலகி விட்டார் அஜீத்.இதையடுத்து முதலில் சூர்யாவைப் போடலாமா என்று யோசித்த பாலா பின்னர்ஆர்யாவை ஹீரோவாக்க முடிவு செய்தார்.பாலா படம் கிடைத்ததால், சரண் இயக்கத்தில் உருவாகும் வட்டாரம் படத்திலிருந்துகழன்று கொள்ள நினைத்த ஆர்யா சிக்கலில் சிக்கி ஒரு வழியாக மீண்டுள்ளார்.இப்போது பாலாவும் ஒரு வழியாக படத்தை ஆரம்பிக்கப் போகிறார்.ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நான் கடவுள் ஷூட்டிங் தொடங்குகிறதாம். ஆர்யாவுக்குஜோடியாக பாவனா நடிக்கிறார். வழக்கம் போல இளையராஜா இசையில் அசத்தப்போகிறார்.தேனப்பன் தான் படத்தைத் தயாரிக்கிறார். கன்னட நிடிகர் தேவராஜ், வில்லனாகதமிழில் அறிமுகமாகிறார். ஜெயமோகன் வசனங்களை எழுதுகிறார். கலையைகிருஷ்ணமூர்த்தி கவனிக்கிறார். அத்தோடு படத்திலும் தலை காட்டவுள்ளார்.காசி, பழனியில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்துகிறார் பாலா. அதன் பின்னர்மதுரைப் பக்கம் கேமரா மற்றும் நடிகர் பட்டாளத்துடன் முகாமிடவுள்ளார்.ஏற்கனவே நடிகர் சங்கத்திற்கு உறுதியளித்தபடி, முதலில் வட்டாரம் படப்பிடிப்பில்ஆர்யா கலந்து கொள்கிறார். அதை முடித்து விட்டு ஆகஸ்ட் மாதம் நான் கடவுளுக்காகதயாராகிறார்.இதற்காக வட்டாரம் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது கெட்டப்பை முழுமையாகமாற்றிக் கொள்ளப் போகிறார் ஆர்யா. பாலா படம் ஆச்சே.. ஆளே மாறியாகனுமே!

    By Staff
    |
    அஜீத் விலகி விட்ட நிலையில், பாலாவின் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில்உருவாகும் நான் கடவுள் படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக ஆகஸ்ட் 15ம் தேதிதொடங்கவுள்ளது.

    பிதாமகனுக்குப் பிறகு கல்யாணம் செய்து கொண்டு ரிலாக்ஸ் ஆன பாலா புதிய படம்தொடர்பான முயற்சிகளில் இறங்கினார். நான் கடவுள் என்று பெயரிடப்பட்டபாலாவின் புதிய படத்தில் முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது.

    கிட்டத்தட்ட ஷூட்டிங்குக்குப் போகும் அளவுக்கு எல்லாம் தயாராகி விட்ட நிலையில்திடீரென ஷூட்டிங்கை ஆரம்பிக்காமல் கதையை ஸ்டெடி செய்யப் போய் விட்டார்பாலா.

    இதனால் கிடைத்த கேப்பில் பரமசிவன், திருப்பதி என இரண்டு படங்களில் நடித்துமுடித்து விட்டார் அஜீத். அப்புறம் பாலா படத்தை ஆரம்பிக்கிற வழியாகத்தெரியாத காரணத்தால், படத்திலிருந்து விலகி விட்டார் அஜீத்.

    இதையடுத்து முதலில் சூர்யாவைப் போடலாமா என்று யோசித்த பாலா பின்னர்ஆர்யாவை ஹீரோவாக்க முடிவு செய்தார்.

    பாலா படம் கிடைத்ததால், சரண் இயக்கத்தில் உருவாகும் வட்டாரம் படத்திலிருந்துகழன்று கொள்ள நினைத்த ஆர்யா சிக்கலில் சிக்கி ஒரு வழியாக மீண்டுள்ளார்.இப்போது பாலாவும் ஒரு வழியாக படத்தை ஆரம்பிக்கப் போகிறார்.

    ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நான் கடவுள் ஷூட்டிங் தொடங்குகிறதாம். ஆர்யாவுக்குஜோடியாக பாவனா நடிக்கிறார். வழக்கம் போல இளையராஜா இசையில் அசத்தப்போகிறார்.

    தேனப்பன் தான் படத்தைத் தயாரிக்கிறார். கன்னட நிடிகர் தேவராஜ், வில்லனாகதமிழில் அறிமுகமாகிறார். ஜெயமோகன் வசனங்களை எழுதுகிறார். கலையைகிருஷ்ணமூர்த்தி கவனிக்கிறார். அத்தோடு படத்திலும் தலை காட்டவுள்ளார்.

    காசி, பழனியில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்துகிறார் பாலா. அதன் பின்னர்மதுரைப் பக்கம் கேமரா மற்றும் நடிகர் பட்டாளத்துடன் முகாமிடவுள்ளார்.

    ஏற்கனவே நடிகர் சங்கத்திற்கு உறுதியளித்தபடி, முதலில் வட்டாரம் படப்பிடிப்பில்ஆர்யா கலந்து கொள்கிறார். அதை முடித்து விட்டு ஆகஸ்ட் மாதம் நான் கடவுளுக்காகதயாராகிறார்.

    இதற்காக வட்டாரம் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது கெட்டப்பை முழுமையாகமாற்றிக் கொள்ளப் போகிறார் ஆர்யா. பாலா படம் ஆச்சே.. ஆளே மாறியாகனுமே!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X