Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இங்கிலீ்ஷா.. தனியா வாங்க, தமிழா.. கும்பலா வாங்க! - இது பரத்பாலா பாரபட்சம்
9 மணிக்கெல்லாம் செய்தியாளர்களை வரச்சொல்லியிருந்தார்கள். ஆனால் படத்தின் ஹீரோ தனுஷ் 11 மணிக்குத்தான் வந்தார். ஹீரோயின் பார்வதி மேனன், இயக்குநர் பரத்பாலா ஆகியோர் ஒவ்வொராக வீடியோ பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இது போன்ற சந்திப்புகளின் ஆரம்பம் உற்சாகமாகத்தான் இருக்கும். படத்தைப் பற்றி குஷியாக பேச ஆரம்பிப்பார்கள். போகப் போக அந்த உற்சாகம் வடிந்த எரிச்சலும் கடுப்புமாக பேச ஆரம்பிப்பார்கள். ஒன் டு ஒன் இன்டர்வியூ, குரூப் குரூப்பாக நடந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். கடைசியில் விட்டால் போதுமென்று தெறித்து ஓடுவார்கள்.
மரியான் டீம் மீடியா சந்திப்பும் அப்படித்தான் ஆனது. அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் பரத்பாலாதான்.
தனுஷை எந்த மீடியா முதலில் சந்திக்க வேண்டும் என்ற பிஆர்ஓ வேலையை அவர் கையிலெடுத்துக் கொண்டார். குறிப்பாக தமிழ் மீடியாவை ஓரங்கட்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார்.
மதிய உணவு நேரம் நெருங்கியது. தமிழ் தொலைக்காட்சிகள், மீடியாக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரத்பாலா தன் தாய்மொழியான மலையாளம் பேசிக் கொண்டு வந்தவர்களுக்கு முதலிடம் கொடுத்து தனுஷை சந்திக்க அனுப்பினார்.
அடுத்து, வட இந்திய சேனல் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வந்ததும், ஹீரோ, ஹீரோயினோடு சேர்ந்து தானும் ஒரு முக்கால் மணிநேரம் பேட்டி கொடுத்தார். அடுத்து வந்த நான்கைந்து தமிழ் தொலைக்காட்சிகளை எல்லாரும் கும்பலா வந்து பேட்டி எடுத்துக்கோங்க, நேரமில்லை என்றார்.
'ஏங்க.. தமிழ்ல படமெடுத்துட்டு, தமிழ் சேனல்களை ஒதுக்கறீங்களே... நாங்க கும்பலா எடுக்கறதுக்கு இது பிரஸ்மீட் இல்லையே... தனித்தனியா பேட்டின்னுதானே கூப்பிட்டீங்க... அதென்ன இங்கிலீஷ் சேனல்களுக்கு தனித்தனியா பேட்டி.. படத்தை வட இந்தியாவிலா ரிலீஸ் பண்ணப் போறீங்க,' என நேருக்கு நேர் பொறிந்தார் ஒரு தமிழ் செய்தியாளர்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத தனுஷ், விறுவிறுவென நடையைக் கட்டினார். பேட்டிக்கு வந்தவர்கள் பேந்தப் பேந்த விழிக்க, அழைப்பு விடுத்தவரோ தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.
தனுஷ், பரத்பாலா போன்றவர்களுக்கு இந்த மாதிரி சந்திப்புகள் புதிதல்ல. இதற்கெல்லாம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டல்லவா இத்தகைய சந்திப்புகளுக்கு வரவேண்டும்?
இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை, ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்றும் புரியவில்லை என தனுஷ் போட்ட ட்வீட்டில் ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கும் போலிருக்கே!!