Don't Miss!
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
22 ஆண்டுகள் கழித்து இணையும் பாரதிராஜா, கங்கை அமரன்
பாரதிராஜா தற்போது எடுக்கும் படம் அன்னக்கொடியும், கொடிவீரனும். இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். ராதாவை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய பாரதி ராஜா தற்போது தனது படத்தில் ராதாவின் மகன் கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இன்னொரு கதாநாயகியாக இனியா நடிக்கிறார்.
இந்த படத்திற்கு இளையராஜா அல்லது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பாரதிராஜா புதுக் கூட்டணியாக ஜி.வி. பிராகஷிடம் இசையமைக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். இந்த படம் முதலில் முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தின் நாயகிகள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டனர். பின்னர் பெப்சி பிரச்சனையால் ஷூட்டிங் பாதித்தது.
இப்பொழுது தான் அந்த பிரச்சனைகள் அடங்கியுள்ளன. இந்நிலையில் பாரதிராஜா படத்தின் பணிகளில் பிசியாகிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியரான கங்கை அமரன் பாடல்கள் எழதுகிறார். அவர் ஏற்கனவே பாடல் எழுதும் பணியைத் துவங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.
கடந்த 1990ம் ஆண்டு பாரதிராஜாவின் என்னுயிர் தோழன் படத்திற்கு கங்கை அமரன் பாடல் எழுதினார். அதன் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.