Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்பெஷல்ஸ்
மீனா திருமணத்திற்கு தயாராகி விட்டார். மாப்பிள்ளை லண்டனைச் சேர்ந்தவர் என்கிறார்கள்.
சீனியர் நடிகைகள் ஒவ்வொருவராக கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி வருகிறார்கள். முதலில் செளந்தர்யா,சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன். அந்த வரிசையில் அடுத்த சேரவிருப்பர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் மீனா.
பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் வயதும் ஏறிக் கொண்டே போவதால், மீனாவுக்கு கல்யாணம் செய்துஅவரது தந்தை தான் முதலில் முயற்சி எடுத்தார்.
ஆனால், ஏதாவது பட வாய்ப்பு வரும், ரஜினியின் அடுத்த படத்தில்கூட சான்ஸ் கிடைக்கும், அதுவரை பொறுத்திருக்கலாம் என தாய் மல்லிகாவும் மீனாவும் காத்திருந்தனர்.
மீனாவும் அடிக்கடி ரஜினிக்கு போன் போட்டு தன்னை நினைவில் வைத்திருக்குமாறு அனத்திக் கொண்டேஇருந்தார். ஆனால், இப்போதைக்கு நான் படம் எடுக்கலம்மா, அப்படியே இருந்தாலும் உனக்கு முக்கிய ரோல் தரமுடியாது என்று ரஜினி டமார் என்று போட்டு உடைக்க, திருமணத்துக்கு தலையை ஆட்டிவிட்டார் மீனாஎன்கிறார்கள்.
இதையடுத்து மல்லிகாவின் காங்கிரஸ் கனெக்ஷன்சன் மூலம் லண்டன் மாப்பிள்ளை சிக்கினாராம். சமீபத்தில்மீனாவும் தாயாரும் ரகசியமாக லண்டன் போய் மாப்பிள்ளையைச் சந்தித்தனர். மாப்பிள்ளையை மீனாவுக்குபிடித்துப் போய்விட்டது.
இதனால் விரைவில் டும் டும் என்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா முதல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரைபெரிய தலைகள் தலைமையில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
எங்கிருந்தாலும் வாழ்க..