Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நெட்'டில் 'துள்ளும்' காளை!!!
இது இன்டர்நெட் காலம். இதை திரையுலகில் இருப்பவர்கள் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ, திருட்டுத்தனமாக படங்களையும், பாடல்களையும் சுடுபவர்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.
முன்பெல்லாம் திருட்டு வீடியோ புழக்கத்தில் இருந்தது. பின்னர் சிடி வந்தது. இப்போது அதையும் தாண்டி படங்களும், பாடல்களும் அதிகாரப்பூர்வமாக திரைக்கு வரும் முன்பே, இணையதளங்களில் ரிலீஸாகி விடுகிறது.
சிவாஜி படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸாகும் முன்பே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் படம் வரும் முன்பே படக் காட்சிகளும் லீக் ஆகின.
சிவாஜியைத் தொடர்ந்து மேலும் பல புதிய படங்களும் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பே இணையதளங்களில் ரிலீஸாக ஆரம்பித்துள்ளன.
அழகிய தமிழ் மகன் படத்தின் பாடல்கள், படம் வருவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானது. இப்போது அஜீத்-நயனதாரா-நமிதாவின் பில்லா, முழுப் படமாக இணையதளங்களில் இலவசமாக கிடைக்கிறது.
அதை விட கொடுமையாக சிம்பு நடித்து இன்னும் வெளிவராத காளை படத்தின் ஆடியோவும் சில இணையதளங்களில் கிடைக்கிறது. அதேபோல பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள கெட்டவன் படத்தின் ஒரு பாடல் ரிலீஸாகி விட்டது.
சூர்யா நடித்துள்ள வாரணம் ஆயிரம் 2 பாடல்களும் கூட இணையதளத்தில் கிடைக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால், பாடல்கள் படு துல்லியமாக இருக்கின்றன.
இதுகுறித்து திரையுலகைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, இதெல்லாம் பெரிய மேட்டரே கிடையாதுங்க. இப்படியெல்லாம் வராமல் இருந்தால்தான் அதிசயம் என்றனர் நொந்து போய்.