Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு
சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது, சாமி சிலைகளுக்கு அருகே செருப்புக் காலுடன் கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் குஷ்பு.
குஷ்புவுக்கு எதிராக கும்பகோணம், ராமேஸ்வரம் ஆகிய ஊர் நீதிமன்றங்களில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் குருமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு:
சாமி சிலைகளை அவமதித்ததாக கூறி நடிகை குஷ்பு மீது புதுக்கோட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வல்லமை தாராயோ பட விழாவில் குஷ்பு சாமி சிலைகளை அவமதித்ததாக புதுக்கோட்டை மாவட்ட அத்வானி பேரவை சார்பில் அதன் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பத்மநாபன் விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.