Don't Miss!
- Sports இந்த சிஎஸ்கே வீரர் ஆர்சிபியின் ஸ்லீப்பர் செல்.. கடைசி வாய்ப்பு கொடுக்கும் தோனி.. மாற்று வீரர் ரெடி
- Finance இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.. உங்க குழந்தையை கில்லாடி ஆகிடுவாங்க..!
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- News நிலப்பட்டா தொலைந்து விட்டதா? பழைய பட்டாவை மீண்டும் பெற முடியுமா? நிலத்தின் பட்டா பெற ஈஸி வழி இதுதான்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்!
நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார்.
வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது.
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த நாய் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மாநாட்டுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கலாம் என திட்டமிட்டு நெல்லைக்குச் சென்றார்.
பின்னர் நெல்லையிலிருந்து சென்னைக்குத் திரும்பும்போது அந்த ஹோட்டலுக்குப் போய் நாயைப் பற்றி விசாரித்தார். அதற்கு ஹோட்டலில் இருந்தவர்கள், அந்த நாயை வேறு யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
ஏமாற்றமடைந்த சந்திரசேகர், அந்த நாயின் பாசத்தை மறக்க முடியாமல் ஒலக்கூர் காவல் நிலையம் சென்று எப்படியாவது அந்த நாயை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
போலீஸாரும் சந்திரசேகரின் 'நாயுள்ளத்தைப்' பார்த்து வியந்து அந்த நாயைத் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நாயை வளர்த்து வருபவரிடம் பேசி அதைப் பெற்று சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர்.
சந்தோஷமடைந்த சந்திரசேகர், நாயுடன் சென்னைக்குத் திரும்பினார். அனாதரவாக திரிந்து கொண்டிருந்த அந்த திண்டிவனம் நாய் இப்போது சந்திரசேகரின் சென்னை வீட்டில் 'ஜம்'மென்று வளைய வந்து கொண்டிருக்கிறது.
வெல், வெல்!!