அவமானப்படுத்த நினைத்தால்..சேரன் பெண்ணைக் கற்பழித்தாக தொடரப்பட்டுள்ள வழக்கில் என்னை சிக்க வைத்துஅவமானப்படுத்த யாராவது நினைத்தால் அதைக் கண்டு ஓட மாட்டேன். அதைநிச்சயமாக சந்திப்பேன். மக்கள் சக்தியோடு அதை முறியடிப்பேன் என்று இயக்குனர்சேரன் கூறியுள்ளார்.திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற ரகமதுன்னிஷா சேரன், தங்கர்பச்சான் ஆகியோர்தன்னை கற்பழித்து விட்டதாக திருச்சி போலீஸில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாகதிருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு தற்போது மீண்டும் உயிர்பெற்றுள்ளது. சமீபத்தில் ரகமதுன்னிஷா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்கொடுத்தார். அதில் சேரன், தங்கர் குறித்த பல தகவல்களை அவர் தெரிவித்ததாககூறப்படுகிறது.இதனால் சேரன், தங்கரை போலீஸார் மீண்டும் விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.இதுகுறித்து சேரன் கூறுகையில், அந்தப் பெண்ணை இன்று வரைக்கும் எனக்கு யார்என்றே தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணை நான் சந்தித்ததே கிடையாது. அவர்சொன்ன குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டேன்.அவரது புகார் பொய்யானது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் போலீஸாரிடம்தெரிவித்தேன். அதன் பிறகுதான் என்னை போலீஸார் விடுவித்தனர். இப்போது இந்தவிஷயம் மீண்டும் கிளம்புவதை அறிந்த எனது வக்கீல்களிடம் கேட்டேன். அதற்குஅவர்கள், இது கோர்ட் நடைமுறை என்று தெரிவித்தனர்.இதில் சூழ்ச்சி ஏதேனும் இருந்தால், என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றுயாராவது நினைத்தால் அதை சட்டப்பூர்வமாக சந்திப்பேன். எனக்குஅரசியல்வாதிகளோடு தொடர்பு கிடையாது.அவர்களுடன் மோதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. மக்கள் பலம் எனக்குஉள்ளது. அந்த சக்தியை வைத்து நான் ஒரு கை பார்ப்பேன் என்றார் சேரன்.

By Staff
பெண்ணைக் கற்பழித்தாக தொடரப்பட்டுள்ள வழக்கில் என்னை சிக்க வைத்துஅவமானப்படுத்த யாராவது நினைத்தால் அதைக் கண்டு ஓட மாட்டேன். அதைநிச்சயமாக சந்திப்பேன். மக்கள் சக்தியோடு அதை முறியடிப்பேன் என்று இயக்குனர்சேரன் கூறியுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற ரகமதுன்னிஷா சேரன், தங்கர்பச்சான் ஆகியோர்தன்னை கற்பழித்து விட்டதாக திருச்சி போலீஸில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாகதிருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு தற்போது மீண்டும் உயிர்பெற்றுள்ளது. சமீபத்தில் ரகமதுன்னிஷா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்கொடுத்தார். அதில் சேரன், தங்கர் குறித்த பல தகவல்களை அவர் தெரிவித்ததாககூறப்படுகிறது.

இதனால் சேரன், தங்கரை போலீஸார் மீண்டும் விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.இதுகுறித்து சேரன் கூறுகையில், அந்தப் பெண்ணை இன்று வரைக்கும் எனக்கு யார்என்றே தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணை நான் சந்தித்ததே கிடையாது. அவர்சொன்ன குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டேன்.

அவரது புகார் பொய்யானது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் போலீஸாரிடம்தெரிவித்தேன். அதன் பிறகுதான் என்னை போலீஸார் விடுவித்தனர். இப்போது இந்தவிஷயம் மீண்டும் கிளம்புவதை அறிந்த எனது வக்கீல்களிடம் கேட்டேன். அதற்குஅவர்கள், இது கோர்ட் நடைமுறை என்று தெரிவித்தனர்.

இதில் சூழ்ச்சி ஏதேனும் இருந்தால், என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றுயாராவது நினைத்தால் அதை சட்டப்பூர்வமாக சந்திப்பேன். எனக்குஅரசியல்வாதிகளோடு தொடர்பு கிடையாது.

அவர்களுடன் மோதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. மக்கள் பலம் எனக்குஉள்ளது. அந்த சக்தியை வைத்து நான் ஒரு கை பார்ப்பேன் என்றார் சேரன்.

Read more about: cheran ready face cases
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X