Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சேரனின் 4 நாயகிகள்!
கோடம்பாக்கம் என்ற, பேசப்பட்ட படத்தைக் கொடுத்தவர் ஜெகன்ஜி. அதற்கு முன்பாக புதிய கீதை என்ற படத்தையும் விஜய்யை வைத்து இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது சேரனை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். ராமன் தேடிய சீதை என்று படத்திற்குப் பெயரிட்டுள்ள ஜெகன்ஜி, படு வித்தியாசான கதையுடன் இப்படத்தைக் கொண்டு வரப் போகிறாராம்.
சேரனுக்கு இதில் நான்கு நாயகிகள் என முடிவு செய்துள்ளனர். அதில் சில நாட்களுக்கு முன்பு வரை 2 பேர் மட்டுமே இறுதியாகியிருந்தனர்.
கேரளத்து ரம்யா நம்பீசன், தூத்துக்குடி நாயகி கார்த்திகா ஆகியோரே அந்த இருவர். தற்போது 3வது நாயகியாக பொய் நாயகி விமலா ராமன் புக் ஆகியுள்ளார். சமீபத்தில் அவரை வைத்து சில டெஸ்ட் காட்சிகளை சுட்டாராம் ஜெகன்ஜி.
பொய் படத்திற்குப் பிறகு தமிழில் சரியான அழைப்புகள் வராததால், மலையாளப் பக்கம் ஒதுங்கி விட்ட விமலாவை இந்தப் படத்தின் கதையைச் சொல்லி மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் ஜெகன்ஜி.
படம் வித்தியாசமானதாக இருக்கும், ஒரு காட்சி கூட அனாவசியமானதாக இருக்காது என்று கையில் அடித்துச் சத்தியம் செய்கிறார் ஜெகன்ஜி.
கேட்க வித்தியாசமாக இருக்கிறது, பார்க்க விறுவிறுப்பாக இருக்குமா?