Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தேவியின் ஐசக் நாளை சரண்?
2வது மனைவி ஹேமமாலினியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில்முன்ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக், நாளை நடிகைதேவிப்பிரியாவுடன் சேர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை தேவிப்பிரியாவும், ஐசக்கும் சேர்ந்து நள்ளிரவில் காரில் அடியாட்களுடன் சென்று ஹேமமாலினியை நடுரோட்டில் வழிமறித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.இந்த வழக்கில் தேவிப்பிரியாவுக்கு ஏற்கனவே முன்ஜாமீன் கிடைத்து விட்டது. இதையடுத்து சமீபத்தில் அவர்நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த நிலையில், ஐசக்கும் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ரகுபதி முன்னிலையில் இன்று விசாரைணக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஐசக்கிற்குமுன்ஜாமீன் வழங்கினார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ. 5,000க்கு சொந்த ஜாமீன் மற்றும்அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் செலுத்தி முன்ஜாமீன் பெறலாம் என நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஐசக் நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைவார், அப்போது தேவிப்பிரியாவும்அவருடன் வந்து தங்களது திருமணத்தையும், நெருக்கத்தையும் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.