twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    காதல் கணவருடன் இணைந்து தயாரித்துள்ள "காதலுடன்" நன்றாக வந்திருப்பதாகப் பேசப்படுவதால் தேவயானி ரொம்பவேசந்தோஷமாக இருக்கிறாராம்.

    அதிரடியாகக் காதல் திருமணம் செய்து கொண்டு கோலிவுட்டைக் கலக்கி பிறகு சில காலம் பட வாய்ப்புகள் சரியாக இல்லாமல்இருந்தார் தேவயானி.

    ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து சான்ஸ் கேட்டு வந்த தேவயானிக்கு பலன் கிடைத்தது. தற்போது கை நிறையபடங்களுடன் சந்தோஷமாக உள்ளார் அவர்.

    இந்நிலையில் தன் கணவரான இயக்குநர் ராஜகுமாரனுடன் "காதலுடன்" படத்தை தேவயானி தயாரித்துள்ளார். காதலை எப்படிதிருமணத்தில் முடிப்பது என்பதைச் சொல்லும் படம் என்று "காதலுடன்" படத்திற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    ஏராளமான பணப் பிரச்சனைகளுக்கிடையே சிரமப்பட்டு படத்தை வெளியிட்டுள்ள தேவயானி, தன்னுடைய எதிர்காலத்திற்கு இந்தப்படத்தைத்தான் முழுவதுமாக நம்பியுள்ளார். கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை தேவயானி செலவிட்டிருப்பதாகத் தகவல்.

    திருட்டு வி.சி.டியில் இருந்து தப்பிவிட்டால் படம் நன்றாக ஓடும் என்று நம்புகிறார் தேவயானி. இதன் ரிசல்டை பார்த்துவிட்டு கணவர்இயக்கத்தில் இன்னொரு படத்தைத் தயாரிப்பது குறித்தும் தேவயானி தீவிரமாக யோசித்து வருகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X