twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷின் 5 ஸ்டார் ஹோட்டல் தனது சினிமா மார்க்கெட் குறித்து சந்தேகம் வந்துவிட்டதால் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்டும் முடிவுக்குவந்துவிட்டார் தனுஷ். எல்லாம் மாமனார் ரஜினி உதவியோடு தான்.சமீபத்தில் தனது சொத்துக்களைப் பிரித்து மகள்களுக்குத் தர வேண்டியதைத் தந்துவிட்டாராம் ரஜினி. இதில் மூத்த மகளானஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு ரூ. 50 பெரிய ரூபா மதிப்புள்ள சொத்து தரப்பட்டுள்ளதாம்.இது தவிர போயஸ் தோட்டத்திலேயே ஒரு பங்களாவையும் வாங்கித் தந்திருக்கிறார் ரஜினி.தனுஷுக்கு இது தலை தீபாவளி. ஆனால் அதை உற்சாக கொண்டாட முடியாத நிலையில் தம்பி இருந்தார். காரணம், மார்க்கெட்பாதாளத்திற்குப் பாய்ந்தோடிவிட்டது தானாம்.எல்லாம் தெரிந்த அவரது சூப்பர் மாமா இதை உணராமல் இருப்பாரா? மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம்!) கொடுத்தாராம்.மகளுக்கும் 40 லட்சம் ரூபாய் தீபாவளிச் செலவுக்குக் கொடுத்தாராம். பின்னர் மாப்பிள்ளையை தனது அருகே அமர வைத்துக் கொண்டுபல்வேறு அட்வைஸ்களை வாரி வழங்கினாராம். அத்தனையையும் பய பக்தியுடன் தனுஷ் கேட்டுக் கொண்டாராம்.சூப்பர் மாமா கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது, முதல்ல ஒரு நல்ல ஸ்டார் ஹோட்டல் கட்டுங்க என்பதுதான். மேலும் தனுஷ்சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி அனுப்பினாராம்.இந் நிலையில் தான் தனுசின் ஹோட்டல் கட்டும் திட்டம் வெளியில் வந்திருக்கிறது. தி.நகரில் 5 கிரவுண்டு நிலம் இருந்தாலும் பரவாயில்லை,வீடாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி உடைச்சிக்கலாம் என்று புரோக்கர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்.இதனால் தனுசுக்காக தீவிரமாக இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புரோக்கர்கள்.இதற்கிடையே தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை படத்தைத் தான் மிகவும் நம்பியிருக்கிறாராம்தனுஷ். இதற்காக சீன்களை செதுக்கி செதுக்கி வைத்து வருகிறாராம் செல்வா.இந்தப் படம் முடிந்தவுடன் திருவிளையாடல் படம் ஆரம்பிக்குமாம். இந்தப் படத்தில் தனுசுக்கான ஆடைகளை டிசைன் செய்யப் போவதுஅவரது மனைவி ஐஸ்வர்யாவாம். படத்தில் வரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை செய்யப் போவது ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யா.சந்திரமுகியில் மிரட்டல் டைட்டில்களை உருவாக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரிப்பது தனுசின்சகோதரி விமலகீதா. ஆக மொத்தம் ஒரு குடும்பத்தின் படமாகவே உருவாகப் போகிறதாம் திருவிளையாடல்.இதற்கிடையே தனுசுக்கு படம் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது என்பதற்காக 3 மாசதுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதுப் பட அறிவிப்பைவெளியிட்டபடி இருக்கிறதாம் கஸ்தூரிராஜா தரப்பு.அந்த வகையில் தான் தனுஷ் நடிக்கும் திருடன போலீஸ், டாக்டர்ஸ் என அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் வந்தன. ஆனால், அந்தப்படங்களைத் தயாரிப்பதற்கான தடயமே கோலிவுட்டில் இல்லையாம்.என்னென்ன வகையில் காது குத்துறாங்கப்பா...

    By Staff
    |

    தனது சினிமா மார்க்கெட் குறித்து சந்தேகம் வந்துவிட்டதால் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்டும் முடிவுக்குவந்துவிட்டார் தனுஷ். எல்லாம் மாமனார் ரஜினி உதவியோடு தான்.

    சமீபத்தில் தனது சொத்துக்களைப் பிரித்து மகள்களுக்குத் தர வேண்டியதைத் தந்துவிட்டாராம் ரஜினி. இதில் மூத்த மகளானஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு ரூ. 50 பெரிய ரூபா மதிப்புள்ள சொத்து தரப்பட்டுள்ளதாம்.

    இது தவிர போயஸ் தோட்டத்திலேயே ஒரு பங்களாவையும் வாங்கித் தந்திருக்கிறார் ரஜினி.

    தனுஷுக்கு இது தலை தீபாவளி. ஆனால் அதை உற்சாக கொண்டாட முடியாத நிலையில் தம்பி இருந்தார். காரணம், மார்க்கெட்பாதாளத்திற்குப் பாய்ந்தோடிவிட்டது தானாம்.

    எல்லாம் தெரிந்த அவரது சூப்பர் மாமா இதை உணராமல் இருப்பாரா? மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம்!) கொடுத்தாராம்.


    மகளுக்கும் 40 லட்சம் ரூபாய் தீபாவளிச் செலவுக்குக் கொடுத்தாராம். பின்னர் மாப்பிள்ளையை தனது அருகே அமர வைத்துக் கொண்டுபல்வேறு அட்வைஸ்களை வாரி வழங்கினாராம். அத்தனையையும் பய பக்தியுடன் தனுஷ் கேட்டுக் கொண்டாராம்.

    சூப்பர் மாமா கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது, முதல்ல ஒரு நல்ல ஸ்டார் ஹோட்டல் கட்டுங்க என்பதுதான். மேலும் தனுஷ்சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி அனுப்பினாராம்.

    இந் நிலையில் தான் தனுசின் ஹோட்டல் கட்டும் திட்டம் வெளியில் வந்திருக்கிறது. தி.நகரில் 5 கிரவுண்டு நிலம் இருந்தாலும் பரவாயில்லை,வீடாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி உடைச்சிக்கலாம் என்று புரோக்கர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்.

    இதனால் தனுசுக்காக தீவிரமாக இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புரோக்கர்கள்.

    இதற்கிடையே தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை படத்தைத் தான் மிகவும் நம்பியிருக்கிறாராம்தனுஷ். இதற்காக சீன்களை செதுக்கி செதுக்கி வைத்து வருகிறாராம் செல்வா.


    இந்தப் படம் முடிந்தவுடன் திருவிளையாடல் படம் ஆரம்பிக்குமாம். இந்தப் படத்தில் தனுசுக்கான ஆடைகளை டிசைன் செய்யப் போவதுஅவரது மனைவி ஐஸ்வர்யாவாம். படத்தில் வரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை செய்யப் போவது ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யா.

    சந்திரமுகியில் மிரட்டல் டைட்டில்களை உருவாக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரிப்பது தனுசின்சகோதரி விமலகீதா. ஆக மொத்தம் ஒரு குடும்பத்தின் படமாகவே உருவாகப் போகிறதாம் திருவிளையாடல்.

    இதற்கிடையே தனுசுக்கு படம் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது என்பதற்காக 3 மாசதுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதுப் பட அறிவிப்பைவெளியிட்டபடி இருக்கிறதாம் கஸ்தூரிராஜா தரப்பு.

    அந்த வகையில் தான் தனுஷ் நடிக்கும் திருடன போலீஸ், டாக்டர்ஸ் என அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் வந்தன. ஆனால், அந்தப்படங்களைத் தயாரிப்பதற்கான தடயமே கோலிவுட்டில் இல்லையாம்.

    என்னென்ன வகையில் காது குத்துறாங்கப்பா...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X