twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செட்டில் ஆகும் தியா குறும்பு நாயகி தியா ஒரு வழியாக கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிறார். குறும்பு மூலம் அறிமுகமான தியா, தீயாக இருந்தாலும், பெரிய அளவில்கோலிவுட்டில் அலைகளை ஏற்படுத்தவில்லை. அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக்கொண்டிருந்த தியாவின் மார்க்கெட், ஒரு கட்டத்தில் தேங்கி நின்றேவிட்டது.கோடம்பாக்கம் படத்தை அவர் ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தார். இந்தப் படம் மூலம்மீண்டும் சூட்டைக் கிளப்பலாம் என காத்திருந்தார். ஆனால் கோடம்பாக்கம் கைவிட்டுவிட்டது. செக்ஸியாக நடித்தும், இழுத்துப் போர்த்தி நடித்தும் எதுவும் தனக்கு கைகொடுக்காததால், கடுப்பான தியா விரக்தியாக இருந்து வந்தார். இந் நிலையில் அவரேஎதிர்பாராத வகையில் செவன், வம்புச் சண்டை, சூறாவளி என தமிழில் 3படங்களிலும், மலையாளத்தில் ராத்திரி மழை என்ற படத்திலும் நடிக்கஒப்பந்தமானார் தியா.இதில் ராத்திரி மழை படத்தில் படு கிளாமராக நடித்து வந்தார். செவன் படத்தில்பேஷன் அழகியாக நடித்து வந்தார். ஆனால், இந்தப் படங்களின் சூட்டிங் சொல்லிக்கொள்ளும் வேகத்தில் நடக்கவில்லை.இதனால் படங்கள் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. சூட்டிங்அவ்வளவாக இல்லாததால் தியாவுக்கும் வேலை இல்லை.இந் நிலையில் தியா திடீரென காணாமல் போனார். அவர் எங்கு இருக்கிறார் என்பதேதெரியாத அளவுக்கு ஆளரவமின்றி இருந்தார் தியா. அது குறித்து நாமும் செய்திபோட்டோம்.தியா மாயமானது மணமகள் கோலம் பூணத்தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது.கேரளாவைச் சேர்ந்த கப்பல்படை கேப்டன் ஒருவரை மணக்கப் போகிறார் தியா. ஒருவகையில் தியாவுக்கு சொந்தக்காரரும் கூட.இரு வாரங்களுக்கு முன் தியா கப்பல் படைக்காரருக்கும், தியாவுக்கும் கேரளாவில்சத்தம் போடாமல் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.அடுத்த மாதம் கேரளாவில் கல்யாணமாம்.இதனால் தியா நடித்து வரும் படங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைஏற்பட்டுளள்ளது.இந்தப் படங்களை அவர் நடித்துக் கொடுப்பாரா இல்லை அம்போ என விட்டு விட்டுஎஸ்கேப் ஆகி விடுவாரா என சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தலையில்குற்றாலத் துண்டை போட்டவாறு காத்திருக்கிறார்கள்.

    By Staff
    |

    குறும்பு நாயகி தியா ஒரு வழியாக கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிறார்.

    குறும்பு மூலம் அறிமுகமான தியா, தீயாக இருந்தாலும், பெரிய அளவில்கோலிவுட்டில் அலைகளை ஏற்படுத்தவில்லை. அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக்கொண்டிருந்த தியாவின் மார்க்கெட், ஒரு கட்டத்தில் தேங்கி நின்றேவிட்டது.

    கோடம்பாக்கம் படத்தை அவர் ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தார். இந்தப் படம் மூலம்மீண்டும் சூட்டைக் கிளப்பலாம் என காத்திருந்தார். ஆனால் கோடம்பாக்கம் கைவிட்டுவிட்டது.

    செக்ஸியாக நடித்தும், இழுத்துப் போர்த்தி நடித்தும் எதுவும் தனக்கு கைகொடுக்காததால், கடுப்பான தியா விரக்தியாக இருந்து வந்தார். இந் நிலையில் அவரேஎதிர்பாராத வகையில் செவன், வம்புச் சண்டை, சூறாவளி என தமிழில் 3படங்களிலும், மலையாளத்தில் ராத்திரி மழை என்ற படத்திலும் நடிக்கஒப்பந்தமானார் தியா.

    இதில் ராத்திரி மழை படத்தில் படு கிளாமராக நடித்து வந்தார். செவன் படத்தில்பேஷன் அழகியாக நடித்து வந்தார். ஆனால், இந்தப் படங்களின் சூட்டிங் சொல்லிக்கொள்ளும் வேகத்தில் நடக்கவில்லை.

    இதனால் படங்கள் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. சூட்டிங்அவ்வளவாக இல்லாததால் தியாவுக்கும் வேலை இல்லை.

    இந் நிலையில் தியா திடீரென காணாமல் போனார். அவர் எங்கு இருக்கிறார் என்பதேதெரியாத அளவுக்கு ஆளரவமின்றி இருந்தார் தியா. அது குறித்து நாமும் செய்திபோட்டோம்.

    தியா மாயமானது மணமகள் கோலம் பூணத்தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த கப்பல்படை கேப்டன் ஒருவரை மணக்கப் போகிறார் தியா. ஒருவகையில் தியாவுக்கு சொந்தக்காரரும் கூட.

    இரு வாரங்களுக்கு முன் தியா கப்பல் படைக்காரருக்கும், தியாவுக்கும் கேரளாவில்சத்தம் போடாமல் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

    அடுத்த மாதம் கேரளாவில் கல்யாணமாம்.

    இதனால் தியா நடித்து வரும் படங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைஏற்பட்டுளள்ளது.

    இந்தப் படங்களை அவர் நடித்துக் கொடுப்பாரா இல்லை அம்போ என விட்டு விட்டுஎஸ்கேப் ஆகி விடுவாரா என சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தலையில்குற்றாலத் துண்டை போட்டவாறு காத்திருக்கிறார்கள்.

      Read more about: dhiya to marry nany cop
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X