Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
34 இயக்குநர்களை அறிமுகம் செய்த ஆர் பி சௌத்ரிக்குப் பாராட்டுவிழா!
இப்போது அவர் தயாரித்துள்ள 81-வது படம், 'பிள்ளையார் தெரு கடைசி வீடு.' இந்த படத்தில், பெரிய இடைவெளிக்குப் பிறகு அவருடைய மகன் 'ஜித்தன்' ரமேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். திருமலை கிஷோர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, ஆர்.பி.சௌத்ரியால் அறிமுகம் செய்யப்பட்ட 34 இயக்குநர்கள் சேர்ந்து வெளியிட, விஷால், ஆர்யா, பரத், பிரசன்னா, சிபிராஜ், விக்ராந்த், சாந்தனு, ஜெய் ஆகிய 8 கதாநாயகர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத்தலைவர்கள் அன்பாலயா கே.பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் கே.முரளிதரன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், எஸ்.பி.ஜனநாதன், சசி, எழில், பேரரசு, ராஜகுமாரன், பாலசேகரன், ராசு மதுரவன், ரவிமரியா, பாரதி கண்ணன், சாய் ரமணி, இசையமைப்பாளர் சக்ரி, கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், டாக்டர் சீனிவாசன், படத்தின் கதாநாயகி சஞ்சனா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
பாராட்டு விழா
விழாவில் பேசிய இயக்குநர்கள் அனைவரும் 'புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்வதில், ஆர்.பி.சவுத்ரிக்கு இணை அவர்தான். அவருடைய துணிச்சல் யாருக்கும் வராது. இதுவரை அவர் 34 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்த இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.