Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உதயநிதி நடிப்பிற்கும் நடனத்திற்கும் அவரது மனைவி கிருத்திகா போட்ட மார்க் எவ்வளவு தெரியுமா?
சென்னை: இன்று அதிகாலை 12 மணிக்கு உதயநிதி அவர்கள் தனது ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
இன்று முதல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என சங்கர் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
அதேபோல செப்டம்பர் மாதத்திலிருந்து தான்காந்தப் படத்தில் நடிக்கப் போவதாக கமல்ஹாசனும் அறிவித்துள்ளார். இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்த பேப்பர் ராக்கெட் என்கிற வெப் சீரிஸீன் புரமோஷனில் உதயநிதி கலந்து கொண்டிருக்கிறார்.
தளபதி 67 படத்தில் த்ரிஷாவிற்கு என்ன ரோல் தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பேப்பர் ராக்கெட்
வணக்கம் சென்னை, காளி திரைப்படங்களைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் தான் பேப்பர் ராக்கெட். கடந்த மாதம் ஓடிடியில் வெளியானது. இதில் காளிதாஸ் ஜெயராமன், தான்யா ரவிச்சந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், சின்னி ஜெயந்த், கருணாகரன், ரேணுகா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த வெப் சீரியஸ்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகர் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தை விட தற்சமயம் முதிர்ச்சியான நடிப்பையே வெளிக்காட்டுகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒன்றில் உதயநிதியின் நடிப்பிற்கு எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்று கிருத்திகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. 10 மதிப்பெண்ணிற்கு 8.5 கொடுத்துள்ளார். காரணம் இதுவரை வந்த படங்களுக்காக மட்டுமல்ல அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டேன். அதனைப் பார்த்ததால் தான் இந்த மதிப்பெண் கொடுத்துள்ளேன் என்று கிருத்திகா கூறியுள்ளார்.
மிஸ் ஆன உதயநிதியின் பிளான்
ஏற்கனவே கிருத்திகாவின் திரில்லர் படத்தில் நடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான் மாரி செல்வராஜ் படத்தை ஒப்புக் கொண்டு அவரிடம் மாட்டிக் கொண்டேன் என்று உதயநிதி முன்னதாக கூறியிருந்தார். காரணம் அவர் அதிக டேக்குகள் வாங்குவாராம். அந்தப் படம் வெளியாகும்போது ஒரு நடிகனாக அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
நடனத்தில் முட்டை
கிருத்திகா உதயநிதி அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். அவருடைய நடனத்திற்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று உதயநிதியிடம் கேட்கப்பட்டபோது, பத்துக்கு ஒரு மதிப்பெண்தான் கொடுத்துள்ளார். அதேபோல உதயநிதியின் நடனத்திற்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று கிருத்திகாவிடம் கேட்கப்பட்டபோது முட்டை மார்க் கொடுத்துள்ளார். இவ்வளவு சிரமப்பட்டு ஆடுகிறேன் முட்டை மார்க்கா என்று உதயநிதி அதிர்ச்சியாக கேட்க, இந்த மதிப்பெண் அதற்காக இல்லை. மற்ற கதாநாயகிகளுடன் ஆடும் நீங்கள் என்னுடன் ஆட மறுக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு முட்டை மார்க் என்று கிருத்திகா நகைச்சுவையாக கூறியுள்ளார். நடனம் ஆடுவதற்கு தயங்கியே அதற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தவிர்த்துவிடுகிறாராம் உதயநிதி.
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!