twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு படத்திற்காக உதயநிதியை 12 ஆண்டுகளுக்கு முன்னர் மிஷ்கின் எப்படி ஃபோட்டோ எடுத்தார் தெரியுமா?

    |

    சென்னை: உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்சமயம் அரசியலில் மட்டுமல்லாமல் படங்களை விநியோகம் செய்வதிலும் பிசியாக இருக்கிறார்.

    இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கும் உதயநிதி கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கப் போகிறார்.

    இந்நிலையில் அவருடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் சினிமா துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நடந்த ஒரு நிகழ்ச்சியில் பல திரைத் துறையினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

    வெற்றி மாறனின் விடுதலை.. தமிழக ரைட்சை கைப்பற்றிய உதயநிதி.. சூப்பர்ல! வெற்றி மாறனின் விடுதலை.. தமிழக ரைட்சை கைப்பற்றிய உதயநிதி.. சூப்பர்ல!

     கமல் ஹாசன்

    கமல் ஹாசன்

    எம்.எல்.ஏ ஆனாலும் உதயநிதி சினிமாவையும் விட்டுவிடக்கூடாது. அவரது தந்தை ஸ்டாலின் அவர்களிடம் பேசும்போது நானும் சினிமா மற்றும் அரசியலில் ஈடுபடுவது போல உதயநிதியும் ஈடுபட வேண்டும். சினிமாவை விட்டுப் போக கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். உதயநிதியை வைத்து தான் தயாரிக்கப் போகும் படம் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தியது என்றும் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அந்த நிகழ்வில் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

     அமீர் கான்

    அமீர் கான்

    அமீர் கானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பை தமிழ் நாட்டில் விநியோகித்தது ரெட் ஜெயிண்ட் நிறுவனம்தான். அதனால் அமீர் கான் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசியபோது தான் எப்போதுமே கமல் சாரை பார்த்துதான் வளர்ந்துள்ளேன். எப்போது அவரை சந்தித்தாலும் எனர்ஜியாக ஃபீல் செய்வேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இப்போது இந்தி ரசிகர்கள் பிற மொழி படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். குறிப்பாக தென்னிந்திய படங்களை ரசித்துப் பார்க்கிறார்கள் என்று கூறினார்.

     மிஷ்கின் புகழாரம்

    மிஷ்கின் புகழாரம்

    உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கியுள்ள மிஷ்கின் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது தன் படங்களில் நடித்த நடிகர்களிலேயே விஷால்தான் மிகவும் ஒழுக்கமானவர் என்றும் மேடைக்காக சொல்லவில்லை உண்மையாகத்தான் சொல்கிறேன் என்றும் விஷாலுக்குப் பிறகு உதயநிதிதான் ஒழுக்கமானவர் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார். அவ்வளவு பெரிய குடும்பத்திலிருந்து வந்து எப்படி இவ்வளவு பணிவோடு இருக்கிறார் என்று நான் எப்போதுமே ஆச்சர்யப்பட்டுள்ளேன் என்று பாராட்டி பேசியுள்ளார்.

     ஃபோட்டோ ஷூட்

    ஃபோட்டோ ஷூட்

    உதயநிதி கதாநாயகன் ஆவதற்கு முன்பாக மிஷ்கின் மூலம்தான் அறிமுகமாக வேண்டும் என்று கிருத்திகா உதயநிதி, மிஷ்கினிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு நாள் அவரை வைத்து ஃபோட்டோஷூட் நடத்தினாராம். கத்துவது போல, ஆக்ரோஷமாக இருப்பது போல ரியாக்ட் செய்யச் சொல்லி சட்டை இல்லாமல்தான் ஃபோட்டோஷூட் செய்ததாக மிஷ்கின் கூறியுள்ளார். அவருக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டதுதான் யுத்தம் செய் படத்தின் கதையாம். முதல் படத்தில் இவ்வளவு கொலைகள் நிறைந்த கொடூரமான படத்தில் நடிக்க வேண்டாம் என்று உதயநிதி தவிர்த்துவிட்டாராம்.

    English summary
    Krithika has taken Udhayanidhi to Myskin saying that before Udhayanidhi becomes a hero, she should make her debut through Myskin. Then one day he conducted a photoshoot with him. Myskin said that he was asked to react like shouting and being aggressive, so he did the photo shoot without a shirt. The story of Yuddham Sei was specially written for him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X