Don't Miss!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- News சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ 2 கோடி வசூலித்த 'எங்கேயும் எப்போதும்'!
ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த் நடித்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. நல்ல பப்ளிசிட்டியை ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டுக் கொடுத்து வந்ததால், படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது.
அதன் விளைவு, தமிழகத்தில் 128 திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. ஆரம்ப வசூலாக தமிழகம் முழுவதும் ரூ 2 கோடியை ஈட்டியுள்ளது எங்கேயும் எப்போதும். முதல் மூன்று நாட்களில் சராசரியாக 80 சதவீத கூட்டத்துடன் ஓடியுள்ளது இந்தப் படம்.
வணிக ரீதியாக படம் தப்பித்துவிட்டது என்ற செய்தியே, முருகதாஸையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தையும் மீண்டும் இணைய வைத்துள்ளது.
அடுத்த படத்துக்கான வேலைகளில் இப்போதே களமிறங்கிவிட்டனர். அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என முருகதாஸும், பெரிய நட்சத்திரங்கள், பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமான படங்களைத் தரும் எங்கள் முயற்சிக்கு பெரிய உந்துதலைத் தந்துள்ளது எங்கேயும் எப்போதும் என பாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங்கும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இப்போது தமிழகத்தில் மட்டுமே வெளியாகியுள்ள எங்கேயும் எப்போதும், அடுத்த வாரம் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ரிலீசாகிறது.