twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ 2 கோடி வசூலித்த 'எங்கேயும் எப்போதும்'!

    By Shankar
    |

    Jai and Anjali
    ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் முதல் முறையாக தயாரித்த படம் எங்கேயும் எப்போதும்.

    ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த் நடித்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. நல்ல பப்ளிசிட்டியை ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டுக் கொடுத்து வந்ததால், படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது.

    அதன் விளைவு, தமிழகத்தில் 128 திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. ஆரம்ப வசூலாக தமிழகம் முழுவதும் ரூ 2 கோடியை ஈட்டியுள்ளது எங்கேயும் எப்போதும். முதல் மூன்று நாட்களில் சராசரியாக 80 சதவீத கூட்டத்துடன் ஓடியுள்ளது இந்தப் படம்.

    வணிக ரீதியாக படம் தப்பித்துவிட்டது என்ற செய்தியே, முருகதாஸையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தையும் மீண்டும் இணைய வைத்துள்ளது.

    அடுத்த படத்துக்கான வேலைகளில் இப்போதே களமிறங்கிவிட்டனர். அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என முருகதாஸும், பெரிய நட்சத்திரங்கள், பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமான படங்களைத் தரும் எங்கள் முயற்சிக்கு பெரிய உந்துதலைத் தந்துள்ளது எங்கேயும் எப்போதும் என பாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங்கும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    இப்போது தமிழகத்தில் மட்டுமே வெளியாகியுள்ள எங்கேயும் எப்போதும், அடுத்த வாரம் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ரிலீசாகிறது.

    English summary
    "Engaeyum Eppothum," Fox Star Studios and AR Murugadoss Productions' maiden co-production in Tamil that released in theatres on 16th September has got a thumbs up from audiences and critics alike; recording an outstanding 80% opening in Tamil Nadu! Fox Star Studio's debut Tamil film "Engaeyum Eppothum" appreciated by audiences & critics and opens to a collection of Rs 2 crores in the state.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X