Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சல்மான்-விவேக்-ஹ்ரித்திக் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை!
தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர் நடிகைகள் தொடர்புடைய எந்தப் படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் மாட்டார்கள்.
பெஃப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து அமிதாப்பச்சன், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கரெல்லாம் விழாவுக்கு போகவில்லை. தென்னிந்திய சினிமாவின் பிற மொழிக் கலைஞர்கள் ஒருவர் கூட இந்த விழாவுக்குப் போகவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் வேண்டுகோளை மதிக்காமல் அந்த மயான பூமியில் நடந்த விழாவில் சில சில்லரை நடிகர்-நடிகைகள் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். சல்மான்கான், விவேக் ஓபராய், பிபாஷா பாசு, ஹ்ரித்திக் ரோஷன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நமது உணர்வுகளை மிதித்துவிட்டு இந்த விழாவில் பங்கெடுத்துள்ளனர். இனி இவர்கள் படங்களை தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் திரையிடமாட்டோம். தொழில் ரீதியான எந்த ஒத்துழைப்பையும் ஃபெப்ஸி வழங்காது. இதில் உறுதியாக உள்ளோம்.." என்றார்.
கைட்ஸ் படக் காட்சிகள் ரத்து:
ஹ்ரித்திக் ரோஷன் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள கைட்ஸ் என்ற இந்திப் படம் சென்னையில் வெளியாகியுள்ளது. சத்யம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் இந்தப் படம் ஓடுகிறது.
ஹ்ரித்திக் ரோஷன் கொழும்பு விழாவில் பங்கேற்றுள்ளதால், தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்தபடி, இந்தப் படத்தை தியேட்டர்களை விட்டு தூக்க வேண்டும், என 'நாம் தமிழர்' அமைப்பு திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் நோக்கில் இன்று முதல் கைட்ஸ் படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்