சென்னையில் திரைப்பட விழா இன்று துவக்கம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் திரைப்பட விழா இன்று(7ம் தேதி) துவங்குகிறது. இன்று துவங்கும் விழா வரும் 11ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. இது வடபழனி பிரசாத் பிலிம் அன் டிவி அகாடமி அரங்கில் நடைபெறுகின்றது. இந்த விழாவை திரைப்பட இயக்குநர், தொகுப்பாளர் பி.லெனின் தொடங்கி வைக்கிறார்.
திரைப்பட ரசணை பயிலரங்கமாகவும் நடைபெற உள்ள இந்த விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் தலைமை வகிக்கினறார்.
திரைப்பட இயக்குநர்கள் பாலுமகேந்திரா, எம். சிவக்குமார், ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











