Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000!
சென்னை: முதல் சென்னை சர்வதேச குறும்படப் போட்டி பிப்ரவரி 20 முதல் 23 வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் படத்துக்கு ரூ 40000 பரிசு வழங்கப்படுகிறது.
சென்னை திரைப்பட கல்விக் கழகமும் சென்னை நிர்வாகவியல் அமைப்பும் இணைந்து இந்த குறும்படப் போட்டியை நடத்துகின்றன.
சர்வதேச அளவிலான குறும்படங்கள், ஆவணப் படங்கள், அனிமேஷன் படங்கள் என மூன்று பிரிவுகளில் குறும்படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இவை கடந்த பிப்ரவரி 2012லிருந்து தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
போட்டிக்கான நடுவர்களாக நடிகை ரோகிணி, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், நடிகர் அபிஷேக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள 19 நாடுகளிலிருந்து 350 படங்கள் வந்துள்ளன.
சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்தப் போட்டி நாளை முதல் வரும் பிப்ரவரி 23-ம் தேதி வரை நடக்கிறது.
போட்டியில் வெல்லும் படத்துக்கு முதல் பரிசாக ரூ 40000 மும், இரண்டாம் இடம் பிடிக்கும் படத்துக்கு ரூ 20000மும், சிறப்பு நடுவர் விருது பெறும் படத்துக்கு ரூ 20000மும் வழங்கப்பட உள்ளது.
படங்களை ரஷ்ய கலாச்சார மைய அரங்கிலும், வடபழனி நூறடி சாலையில் உள்ள எஸ்ஆர்எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிட்யூட் அரங்கிலும் திரையிடுகின்றனர்.
விழாவின் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கின்றன.