Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கௌதம் வாசுதேவ் மேனனுக்கு படமே எடுக்க தெரியாதுங்க... சிம்பு ஃபிளாஷ் பேக்
சென்னை: இயக்குநர் கௌதம் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் கௌதம் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி ஹேட்ரிக் வெற்றி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குநர் கௌதமிற்கு படமே எடுக்கத் தெரியாது என்று தங்களிடம் கூறியவர்கள் பற்றி சிம்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால்: குதிரையில் கெத்தாக ரீ-என்ட்ரி கொடுத்து அசத்தல்
மின்னலே ரசிகன் சிம்பு
மின்னலே திரைப்படம் வெளியான போது அதன் இசையும் திரைப்படமும் மக்களை வெகுவாக கவர்ந்தது. காரணம் அன்றிருந்த இளைஞர்களை அந்தப் படம் எளிதாக சென்று அடைந்தது. இன்னமும் கூட கௌதம் மற்றும் ஹாரிஸ் கூட்டணியில் வந்த பாடல்களில் மின்னலே படத்திற்கு தனி இடம் உண்டு என்றே கூறலாம். அந்த மின்னலே படத்திற்கு நடிகர் சிம்பு தீவிர விசிறியாம்.
கௌதம் படத்தில் சிம்பு
அப்போது நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலகட்டம். தனது தந்தை டி.ராஜேந்திரிடம் மின்னலே திரைப்படத்தை பற்றி கூறி அந்த இயக்குநருடன் ஒரு திரைப்படத்தை எனக்கு அமைத்துக் கொடுங்கள் இந்த நேரத்தில் மின்னலே போன்ற ஒரு ரொமான்டிக் கதையில் நான் அடிக்க வேண்டும் என்று சிம்பு ஆசைப்பட்டாராம். டி.ராஜேந்தரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாராம்.
பொய் தகவல்
அப்போது ஒரு தயாரிப்பாளர் இயக்குநர் கௌதமிற்கு படம் எடுக்கவே தெரியாது அதிக காட்சிகளை எடுத்துவிட்டு பணத்தை வீணடிப்பார் என்று கூறினாராம். இதை குறிப்பிட்ட சிம்பு எப்படி என்னை பற்றி மற்றவர்களிடம் தவறாக கூறுகிறார்களோ அதே போல கௌதமை பற்றி எங்களிடமும் தவறாக கூறினார்கள். அதனால் தான் அப்போது ஒன்றாக படம் எடுக்கவில்லை என்று கூறியதோடு எப்படி விண்ணைத்தாண்டி வருவாயா படம் உருவானது என்பதை பற்றியும் கூறியுள்ளார்.
வாரணம் ஆயிரம் பிரச்சனை
சிம்பு நினைத்தது போல அவருடன் படம் அமையவில்லை என்றாலும் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வந்த காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களை கவனித்து வந்தாராம் சிம்பு. அப்போது வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு ஏதோ பிரச்சனை வந்த போது சிம்பு தான் உதவினாராம். அதன் பின்னர் தான் விடிவி கணேஷ் ஒரு புதிய புராஜெக்ட்டில் உள்ளே வந்து அதன் பிறகு தொடங்கப்பட்டது தான் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் என்று சிம்பு கூறியுள்ளார்.