Don't Miss!
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி-கமலை இயக்க ஆசை! - கவுதம் மேனன்
ஒரே படத்தில் ரஜினி - கமல் இருவரையும் வைத்து இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், என்றார் இயக்குநர் கவுதம் மேனன்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கவுதம் மேனன், தனது அடுத்த படமான நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பர வேலைகளில் மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்த படத்தில், வீரா கதை நாயகனாக அறிமுகமாகிறார். இவர், கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். நாயகியாக சமீரா ரெட்டி நடித்துள்ளார்.
படத்தை பற்றி கவுதம் வாசுதேவ் மேனன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "கடந்த வருடம் நான் ஒரு டாக்டரை சந்தித்து பேசும்போது, அவரிடம் சிகிச்சை பெறுகிற ஒரு விசித்திரமான மனநோயாளி பற்றி கூறினார். அப்போதுதான் நடுநிசி நாய்கள் படத்தின் கரு உருவானது.
அந்த மனநோயாளியாக யாரை நடிக்க வைப்பது? என்று யோசித்தபோது, என் உதவியாளர் வீரா கண்ணில் பட்டான். அவனிடம் எப்போதுமே ஒரு தேடல் இருக்கும். அந்த தேடல்தான் அவனை கதை நாயகனாக தேர்வு செய்ய வைத்தது.
படத்தை முடித்து முதல் பிரதி தயாரானதும், படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அதற்காக வெவ்வேறு துறைகளை சேர்ந்த 35 பேர்களை தேர்வு செய்து படம் பார்க்க வைத்தோம்.
படம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, வீராவைப் பார்க்க பயந்தார்கள். அது, எனக்கு கிடைத்த வெற்றி.
த்ரிஷாவுக்கு பதில் எமி ஜாக்ஸன்:
அடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்குகிறேன். மறைந்த இந்தி நடிகை ஸ்மிதா பாட்டீலின் மகன் பிரதிக் கதாநாயகனாக நடிக்கிறார். திரிஷா நடித்த வேடத்தில், எமி ஜாக்சன் நடிக்கிறார். டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்குகிறேன்.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன்:
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நடக்குமா தெரியவில்லை,'' என்றார்.