Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹய்யோ..முட்டிக்கிச்சி முட்டிக்கிச்சி சண்டை!
தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அப்படி ஒரு ஏழாம் பொருத்தம். ஒரு படம் ஆரம்பித்து அதன் முதல் ஷெட்யூல் முடிவதற்குள்ளேயே தயாரிப்பாளரும் இயக்குநரும் சிண்டைப் பிடித்துக்கொண்டு சண்டையில் இறங்கி விடுவார்கள். அந்தளவு தெளிவானவர்கள்.
இதில் விதிவிலக்காக சில இயக்குநர்கள் ஒரே தயாரிப்பாளருக்கு மூன்று நான்கு படங்கள் கூட செய்து தருவதுண்டு, எந்த சச்சரவும் இல்லாமல்.
அப்படியொரு புரிந்து கொள்ளலுடன் இதுவரை இயங்கிக் கொண்டிருந்த ஆஸ்கார் ரவி-கெளதம் மேனன் கூட்டணியும் இப்போது டமார்.
ஆஸ்கார் ரவிக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தை இயக்கிக் கொடுத்தார் கெளதம் மேனன். அவரது செயல்பாடுகள் பிடித்துப் போனதால் தொடர்ந்து தனது மூன்று படங்களை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் ரவி. அதில் ஒன்றுதான் சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம்.
அடுத்த படம் த்ரிஷா நடிக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம். மூன்றாவது படத்தை விஜய்யை வைத்து இயக்குவதாகத் திட்டம். எல்லாமே முதல் பிரதி அடிப்படையில் இயக்குவதாக ஒப்பந்தம்.
இந்நிலையில் வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் துவங்கி தொடர்ந்து நடந்தது. இந்தப் படத்துக்காக ஆப்கானிஸ்தானுக்கெல்லாம் போனார்கள்.
கிட்டத்தட்ட படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் செலவைக் கணக்குப் போட்டுப் பார்த்த ஆஸ்கார் ரவிக்கு பயங்கர ஷாக். காரணம், திட்டமிட்டதைவிட ரூ. 3.5 கோடி கூடுதலாக செலவு வைத்திருந்தார் கெளதம்.
உடனே தயாரிப்பாளர் சங்கத்தில், போட்ட பட்ஜெட்டை தாண்டி படமெடுத்து நஷ்டம் ஏற்படுத்தியதாக கெளதம் மீது புகார் செய்துவிட்டார் ஆஸ்கார் ரவி.
கெளதம் மேனனோ, மேற்கொண்டு 3.5 கோடி கொடுத்தால்தான் படத்தை முடித்துக் கொடுக்க முடியும் என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
சங்கத்தின் பஞ்சாயத்துக்குப் பிறகு வேறு வழியின்றி அந்தப் பணத்தைத் தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் ரவி. இந்த தொகைக்குள்ளாவது எடுத்து முடிப்பாரா அல்லது இன்னும் சில கோடிகளை விழுங்க வைப்பாரா என்ற பீதியிலிருக்கிறார் ரவி.
மேலும் சென்னையில் ஒரு மழைக்காலம் படம் முடிந்த பிறகு, விஜய் படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து கெளதமை கழட்டிவிடவும் முடிவு செய்துள்ளாராம்.
நல்ல தயாரிப்பாளர்களை தொடர்ந்து படமெடுக்க விடுங்கப்பா...
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!