Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ் பிக்சர்ஸை மூடுகிறார் ஷங்கர்?
காதல், வெயில், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி, கல்லூரி என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைத் தந்த ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அப்புறம் தந்ததெல்லாம் தொடர் தோல்விப் படங்களைத்தான்.
அறை எண் 305-ல் கடவுள், ரெட்டச் சுழி, அனந்தபுரத்து வீடு என படங்கள் படுத்ததால் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கிறதாம் எஸ் பிக்சர்ஸ்.
நடுவில் வந்த ஈரம் படம் மட்டும் முதலுக்கு மோசமில்லாமல் போயிருக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து நல்ல லாபம் பார்ப்பது என்ற ஷங்கரின் கொள்கைக்கே பங்கம் வந்ததால், போதும் படம் தயாரித்தது. இத்தோடு தற்காலிகமாக நிறுத்தி வைப்போம் என ஷங்கர் உறுதியாகக் கூறிவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து புதிய கதைகளோடு வந்த இயக்குநர்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்களாம் ஷங்கர் அலுவலகத்தில்.
இதுகுறித்து ஷங்கர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, "படத்தயாரிப்பை ஒரேயடியாக நிறுத்தும் திட்டமில்லை. இப்போதைக்கு ஒரு இடைவெளி விட்டு, நம்பிக்கையான ஸ்கிரிப்ட் வரும்போது மீண்டும் களமிறங்குவோம்" என்றார்.