twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவி. நடிகையுடன் ஹரீஷ் ராகவேந்திரா எஸ்கேப்? பிரபல பின்னணிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா மீது அவரது மனைவி உமாதேவி போலீஸில் புகார்கொடுத்துள்ள நிலையில் ராகவேந்திரா, டிவி நடிகை பிரதீபா என்பவருடன் தலைமறைவாகி விட்டதாககூறப்படுகிறது. பாரதி படத்தில் இடம் பெற்ற நிற்பதுவே நடப்பதுவே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராகஅறிமுகமானவர் ஹரீஷ் ராகவேந்திரா. பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.அவருக்கும் மலேசியாவைச் சேர்ந்த் கோவிந்தராஜா என்பவரின் மகள் உமாதேவிக்கும் கடந்த 2003ம் ஆண்டுதிருமணம் நடந்தது.இது ஒரு காதல் திருமணம் ஆகும். திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுஇருவரும் பிரிந்தனர். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நில நீதிமன்றத்தில் ராகவேந்திரா மனு தாக்கல்செய்துள்ளார்.இந்த நிலையில், ராகவேந்திரா மீது உமாதேவியின் சார்பில் அவரது தந்தை கோவிந்தராஜா சென்னைமாநகரகாவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். இப்புகாரில் ஏற்கனவே முடிவு செய்தபடி தனதுமகளுக்கு சேர வேண்டிய பணத்தை ராகவேந்திரா தராமல் ஏமாற்றுவதாக கூறியிருந்தார்.இப்புகார் குறித்துவிசாரணை நடத்தும்படி வட பழனி போலீஸாருக்கு ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.இதையடுத்து வட பழனி உதவி ஆணையர் சேது, உமாதேவியிடம் முதலில் விசாரணை நடத்தினார். பின்னர்ஹரீஷ் ராகவேந்திராவிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர்அங்கு இல்லாததுதெரியவந்தது.அவருக்கும் டிவி நடிகை பிரதீபா என்பவருக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக போலீஸ்விசாரணையின்போது உமா தேவி தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதீபா வீட்டுக்கும் போலீஸார் விரைந்தனர்.அவரும் வீட்டில் இல்லை. எனவே ராகவேந்திராவும், பிரதீபாவும் சேர்ந்து தலைமறைவாகி விட்டதாக போலீஸார்சந்தேகிக்கின்றனர்.இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இருவரையும் கண்டுபிடிக்கபோலீஸார் நடவடிககை எடுத்துள்ளனர்.

    By Staff
    |

    பிரபல பின்னணிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா மீது அவரது மனைவி உமாதேவி போலீஸில் புகார்கொடுத்துள்ள நிலையில் ராகவேந்திரா, டிவி நடிகை பிரதீபா என்பவருடன் தலைமறைவாகி விட்டதாககூறப்படுகிறது.

    பாரதி படத்தில் இடம் பெற்ற நிற்பதுவே நடப்பதுவே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராகஅறிமுகமானவர் ஹரீஷ் ராகவேந்திரா. பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.அவருக்கும் மலேசியாவைச் சேர்ந்த் கோவிந்தராஜா என்பவரின் மகள் உமாதேவிக்கும் கடந்த 2003ம் ஆண்டுதிருமணம் நடந்தது.

    இது ஒரு காதல் திருமணம் ஆகும். திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுஇருவரும் பிரிந்தனர். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நில நீதிமன்றத்தில் ராகவேந்திரா மனு தாக்கல்செய்துள்ளார்.

    இந்த நிலையில், ராகவேந்திரா மீது உமாதேவியின் சார்பில் அவரது தந்தை கோவிந்தராஜா சென்னைமாநகரகாவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். இப்புகாரில் ஏற்கனவே முடிவு செய்தபடி தனதுமகளுக்கு சேர வேண்டிய பணத்தை ராகவேந்திரா தராமல் ஏமாற்றுவதாக கூறியிருந்தார்.

    இப்புகார் குறித்துவிசாரணை நடத்தும்படி வட பழனி போலீஸாருக்கு ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.இதையடுத்து வட பழனி உதவி ஆணையர் சேது, உமாதேவியிடம் முதலில் விசாரணை நடத்தினார். பின்னர்ஹரீஷ் ராகவேந்திராவிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர்அங்கு இல்லாததுதெரியவந்தது.

    அவருக்கும் டிவி நடிகை பிரதீபா என்பவருக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக போலீஸ்விசாரணையின்போது உமா தேவி தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதீபா வீட்டுக்கும் போலீஸார் விரைந்தனர்.அவரும் வீட்டில் இல்லை. எனவே ராகவேந்திராவும், பிரதீபாவும் சேர்ந்து தலைமறைவாகி விட்டதாக போலீஸார்சந்தேகிக்கின்றனர்.

    இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இருவரையும் கண்டுபிடிக்கபோலீஸார் நடவடிககை எடுத்துள்ளனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X