Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காளைக்கு தடை நீக்கம்
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரிப்பில், தருண்கோபி இயக்கத்தில், சிம்பு, வேதிகா ஜோடியாக நடித்துள்ள காளை படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தில் சங்கீதாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் காளை படத் தயாரிப்பாளறுக்கு, தயாரிப்பாளருக்கு விஜயா பிக்சர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விஜயா என்பவர் கொடுத்த ரூ.74 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காததால் அவர் உயர்நீதிமன்றத்தை அணுகி காளை படத்தை வெளியிட தடை கோரினார்.
தன்னுடைய பணத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி திருப்பிக் கொடுக்கும் வரையில் காளை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் காளைக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தடை உத்தரவை நீக்கக் கோரியும், காளை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கோரியும் சக்கரவர்த்தி சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ராமசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது சக்ரவர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி கூறுகையில், எதிர்தரப்பு மனுதாரர் விஜயாவிடம் வாங்கிய பணத்தை 2 தவணைகளாக செலுத்துகிறோம். தற்போது ரூ.31 லட்சத்தை வழங்குகிறோம். மீதிப்பணத்தை பிறகு கொடுக்கிறோம் எனக் கூறினார்.
விஜயாவின் வழக்கறிஞர் சுந்தரேசன் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து காளைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.