Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காளைக்கு தடை நீக்கம்
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரிப்பில், தருண்கோபி இயக்கத்தில், சிம்பு, வேதிகா ஜோடியாக நடித்துள்ள காளை படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தில் சங்கீதாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் காளை படத் தயாரிப்பாளறுக்கு, தயாரிப்பாளருக்கு விஜயா பிக்சர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விஜயா என்பவர் கொடுத்த ரூ.74 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காததால் அவர் உயர்நீதிமன்றத்தை அணுகி காளை படத்தை வெளியிட தடை கோரினார்.
தன்னுடைய பணத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி திருப்பிக் கொடுக்கும் வரையில் காளை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் காளைக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தடை உத்தரவை நீக்கக் கோரியும், காளை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கோரியும் சக்கரவர்த்தி சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ராமசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது சக்ரவர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி கூறுகையில், எதிர்தரப்பு மனுதாரர் விஜயாவிடம் வாங்கிய பணத்தை 2 தவணைகளாக செலுத்துகிறோம். தற்போது ரூ.31 லட்சத்தை வழங்குகிறோம். மீதிப்பணத்தை பிறகு கொடுக்கிறோம் எனக் கூறினார்.
விஜயாவின் வழக்கறிஞர் சுந்தரேசன் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து காளைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.