Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் நாளே சுந்தர்.சி-யுடன் நடந்த மோதல்..கடுமையாக திட்டிவிட்டேன்..நடிகர் ஜெய்
சென்னை : நடிகர் ஜெய் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமேன்னு இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கு. ரெண்டுமே இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய திரைப்படங்கள். அதுல வீரபாண்டியபுரம் திரைப்படத்திற்கு இசையும் அமைச்சிருந்தாரு.
இப்ப அடுத்ததா வீராப்பு, ஐந்தாம்படை, தில்லு முல்லு, ஆடாம ஜெய்ச்சோமடான்னு பல திரைப்படங்கள இயக்கிய இயக்குநர் பத்ரி டைரக்சன்ல பட்டாம்பூச்சி படத்துல நடிச்சிருக்காரு.
முதல் முறையா வில்லன் கதாப்பாத்திரத்த ஏற்று நடிச்சிருக்காரு, ஜெய். பத்ரி இயக்கத்துல அதிக படங்கள்ல கதாநாயகனா நடிச்சிருந்த சுந்தர்.சி அவர்கள் தான் இந்தப் படத்துலையும் கதாநாயகனா நடிச்சிருக்காரு. நடிகர் ஜெய் வில்லனா நடிச்சது மட்டும் இல்லாம இந்தப் படத்துலையும் ஒரு கானா பாட்ட கம்போஸ் பண்ணியிருக்காரு. வர ஜூன் 24-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகள்ல ரிலீஸ் ஆகுது.
கோயிலுக்குள் செருப்பு...நயன்தாராவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் பிரபலம்
வில்லனாக முதல் அனுபவம்
இந்தப் படம் குறித்து நடிகர் ஜெய் சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டில, முதன் முறையா வில்லனா நடிக்கிறீங்க. இத உங்க இமேஜ பாதிக்காதான்னு கேட்கப்பட்ட கேள்விக்கு, - 40 ஆண்டுகளுக்கு முன்னாடிதான் திரைல பாக்குற நபர்கள் நிஜத்துலையும் அப்படித்தான் இருப்பாங்கன்னு மக்கள் நம்புனாங்க. அதனாலையே நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஹீரோஸ் தயக்கம் காட்டுனாங்க. ஆனா இப்ப சினிமாவையும் நெஜ வாழ்க்கையையும் பிரிச்சு பாக்குற அளவுக்கு மக்கள் தெளிவாய்ட்டாங்க. அதனால வில்லன நடிச்சா, இன்னும் மக்கள கவர் பண்லாம். ஷூட்டிங் மொத நாளே வில்லனுக்கான வைப கிரியேட் பண்ணி வச்சிருந்தாங்க. லைட்டிங், ஆர்ட் வெர்க், டைலாக்னு எல்லாமே வில்லான நடிக்கிறதுக்கான மூட செட் பண்ணி விட்ருச்சு. இன்னும் சொல்ல போனா, நா ரொம்ப மதிக்கிற சுந்தர்.சி சாரையே மொத நாள் கெட்ட வார்த்தைல திட்டி நடிக்கிற மாதிரி இருந்துச்சு. மொதல்ல கஷ்டப்பட்டாலும் அப்புறம் கேரக்டரா செட் ஆயிடுச்சு. சுந்தர்.சி சாரையே மொத நாள் கெட்ட வார்த்தைல திட்டி நடிக்கிறப்ப ரொம்பவும் தயக்கமா தான் இருந்துச்சு, ஒரு வழியா செஞ்சு முடிச்சுட்டேன்
தேவாவை பாட வைத்த ஜெய்
அது மட்டும் இல்லாம, படத்தோட சில காட்சிகள் ஜெயில்ல நடக்குற மாதிரி இருந்ததால, இயக்குனர் பத்ரி அங்க ஒரு கானா சாங் இருந்தா நல்லாருக்குன்னு ஃபீல் பண்ணதாகவும், கானா பாடல்களுக்கு பேர் போன குடும்பத்துலருந்து வந்ததால தன்னையே அதுக்கு இசையமைக்கச் சொன்னதாகவும், அப்படித்தான் இந்தப் படத்துக்கு ஜெயில் குத்துங்குற பாடல, தான் கம்போஸ் பண்ணதாகவும், அதுக்காக இயக்குனர் பத்ரிக்கும், தயாரிப்பாளர் சுந்தர்.சி-க்கும் தன்னுடைய நன்றிகள தெரிவிச்சிருக்காரு, ஜெய். ஏற்கனவே தான் நடிச்சிருந்த டிரிப்பில்ஸ் வெப் சீரிஸ்லதான் முதல் முறையா ஒரு பாட்டுக்கு இசையமைச்சிருந்தாரு. அந்தப் பாட்ட, ஜெய்யோட பெரியப்பாவும் இசையமைப்பாளருமான முரளியோட மகன் போபோ ஷஷிதான் பாடி இருந்தாரு. போபோ ஷஷியும் ஒரு இசையமைப்பாளர்தான். அதே போல பட்டாம்பூச்சி படத்துக்கு, தான் இசையமைச்ச ஜெயில் குத்து பாட்ட, தன்னோட பெரியப்பா தேவா அவர்கள வச்சே பாட வச்சிருக்காரு.
உடல் மொழியை பின்பற்றி ஹோம் வர்க்
இந்தப் படத்துல டர்னெர் சிண்ட்ரோம் குறைபாடு இருக்க கதாப்பாத்திரத்துலதான் ஜெய் நடிச்சிருக்காராம். பொதுவா பட்டாம்பூச்சிக்கு ஒரு பிரச்சன வரும்போது மொதல்ல அதோட இடது பக்கத்து ரெக்கையதான் துடிக்குமாம். அதனால தன்னுடைய கதாப்பாத்திரமும் பட்டாம்பூச்சி மாதிரி செயல்படணும்னு ஹோம் வர்க் பண்ணியிருக்காரு.
இயக்குனர் அவதாரம் ஜெய்
வீரபாண்டியபுரம் படத்துல நடிக்கும்போதே, தவிர்க்க முடியாத சூழ்நிலைல இயக்குனர் சுசீந்திரன் இவர ஒரு காட்சிய டைரக்ட் பண்ண சொல்லியிருக்காரு. அதே மாதிரி இந்தப் படத்துலையும் கொடூரமான கொலைக் காட்சிகள எடுக்கும்போது தன்னுடைய பங்களிப்பையும் தந்திருக்காராம். கூடிய சீக்கிரமே இயக்குனர் ஜெய்யையும் இயக்குநரா பாக்கலாம்னு பரவலா பேசப்படுது
இம்மான் அண்ணாச்சி
இந்தப் படத்துல ஜெய் சுந்தர்.சி காட்சிகள தவிர்த்து ஜெய்க்கும் இம்மான் அண்ணாச்சிக்கும் இடையே நடக்குற காட்சிகள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்குமாம். அது மட்டும் இல்லாம, சமீபத்துல வந்த படங்கள்ல, நடிச்ச தன்னையே பிரமிக்க வச்ச இண்டர்வல் பிளாக் பட்டாம்பூச்சி படத்துல இருக்குறதாகவும், இந்தக் கதாப்பாத்திரத்துல நடிச்சதுக்கு அப்புறம் தனக்கு கான்ஃபிடென்ஸ் இன்னும் அதிகமாகியிருக்குன்னும் ஜெய் சிலாகித்துப் பேசி இருக்காரு.முதல் முறையா வில்லன் கதாப்பாத்திரத்த ஏற்று நடிச்சிருக்கும் ஜெய் எந்த அளவுக்கு வெற்றி பெற போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் .