சங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு... இத்தோட நிறுத்திக்கிறேன்! -எம்எஸ்வி

சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கிதமும் எனக்குத் தெரியும். அதனால், என் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உள்பட பேருக்கு மட்டுமே பேச அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இதில் ஜெயலலிதாவின் உரைதான் மிகப் பெரியது. அவர் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த உரையை வாசித்தார்.
பின்னர் எம்எஸ்வியை ஏற்புரையாற்ற அழைத்தனர். அவர் மிகச் சுருக்கமாக இப்படிச் சொன்னார்:
"எனக்கு சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கீதமும் தெரியும். அதனால் பேச்சை இத்தோட முடிச்சிக்கிறேன். இருக்கும் வரைக்கும் யாருக்கும் பிரச்சினை இல்லாமல், எங்களால முடிஞ்ச இசைப்பணியை செய்யும் வல்லமையை இறைவன் தரணும்னு கேட்டுக்கிட்டு, முடிச்சிக்கிறேன்," என்றார்.
டிகே ராமமூர்த்தி ஒரு வணக்கம் போட்டுவிட்டு கீழே வந்துவிட்டார்.
பொதுவாக ஏற்புரையில் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசுவார்கள், நிகழ்ச்சியின் நாயகர்கள். ஆனால் எம்எஸ்வி, தன்னை விட தன் இசை பேசட்டும் என்ற நினைப்புடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார் போலும்!


Click it and Unblock the Notifications











