Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"கமல்ஹாசன் படத்தை 100 தடவை பார்த்தவன் நான்'' - சாருஹாசன் பேச்சு
கமல்ஹாசன் கவுர வேடத்தில் நடித்த மலையாள படம், '4 ப்ரெண்ட்ஸ்.' இந்த படத்தில் அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, மீராஜாஸ்மின் ஆகியோரும் நடித்துள்ளனர். சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 4 நண்பர்களை பற்றிய படம். உயிருக்கு கெடு வைக்கப்பட்ட அந்த 4 பேர்களின் கவலைகளை போக்கி, உற்சாகமூட்டுகிற வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. சமூக கருத்துள்ள படம் என்பதால், இலவசமாகவே நடித்துக்கொடுத்தார்.
இந்த படத்தை, 'அன்புள்ள கமல்' என்ற பெயரில், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார், பிரதீப். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.
பாடல்களை, கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:
"அன்புள்ள கமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படவிழாவில் கலந்துகொள்ள எனக்கு அதிக உரிமை இருக்கிறது. கமல்ஹாசன் பிறப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகிவிட்டது.
யாராவது அவரது படத்தை 100 தடவை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா? நான் பார்த்து இருக்கிறேன். அது, கமல்ஹாசன் நடித்த முதல் படம், 'களத்தூர் கண்ணம்மா.'
கமல்ஹாசனை குழந்தையாக தூக்கிக்கொண்டு தியேட்டர், தியேட்டராக போனேன். எல்லா தியேட்டர்களிலும் அந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன். என் தம்பியை முதன்முதலாக திரையில் பார்த்தபோது, ஆனந்த கண்ணீர் விட்டேன்.
அதுபோல் ஒரு படம் வெற்றி பெற்றால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆனந்த கண்ணீர் வரவேண்டும்,'' என்றார்.
விழாவில், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி' ஜி.சேகரன், நடிகர்கள் விதார்த், ரவிகாந்த், இசையமைப்பாளர் ஜான், பூண்டி மாதா கோவில் பங்கு தந்தை அகஸ்டின் பீட்டர், பட அதிபர் பிரதீப் ஆகியோர் பங்கேற்றனர்.