Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
உங்கள சீண்டுனா நா வருவேன்... தானுவிற்கு விஜயகாந்தின் மாஸ் சப்போர்ட்
சென்னை: சமீபத்தில் பார்த்திபன் அவர்களின் இரவின் நிழல் திரைப்படத்தை விநியோகம் செய்திருந்தார் தயாரிப்பாளர் தானு.
Recommended Video
அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கம் வாடிவாசல் திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்றைய முன்தினம் நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தானு கொடுத்த ஒரு பேட்டி ஒன்று யூடிபில் வெளியானது.
“லைகர் படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிரு தான் காரணம்”: குற்றம்சாட்டும் தியேட்டர் ஓனர்
தொடர் கூட்டணி
தானு முதன் முதலில் தயாரித்திருந்த திரைப்படம் 'யார்'. அதன் பிறகு கூலிக்காரன் என்கிற படத்தை விஜயகாந்த் நடிப்பில் தயாரித்திருந்தார். அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படம்தான் விஜயகாந்தின் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாக அப்போதிருந்ததாம். கிட்டத்தட்ட 46 லட்சங்கள் அந்தப் படம் வசூலித்திருந்ததாம். ஆனால் அதன் பிறகு கூலிக்காரன் திரைப்படம்தான் அதிக வசூல் செய்ததாம். விஜயகாந்தின் படம் ஒரு கோடி வசூலை முதலில் தொட்டது என்றால் அது கூலிக்காரன்தான் என்று தானு கூறியுள்ளார்.
இயக்குநர் தானு
கூலிக்காரன் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து 'நல்லவன்' என்கிற படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை, எழுதி தானு தயாரிக்க இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். விஜயகாந்த் நடிப்பில் உருவான அந்தப் படமும் மிகப் பெரிய ஹிட்டானது. விஜயகாந்த் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக புதுப்பாடகன் என்கிற படத்தை எழுதி, தயாரித்தது மட்டுமில்லாமல் இசையமைத்து, பாடல்கள் எழுதி, இயக்கவும் செய்திருந்தார் தானு. ஆனால் அந்தப் படம் பெரிதாக ஓடாததால் அத்தோடு இனி படங்களை இயக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்தாராம் தானு.
விஜயகாந்தின் பொற்காலம்
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சினிமாவிற்கு பொற்காலமாக இருந்தது. நடிகர் சங்கம் மிகப்பெரிய கடனில் இருந்தபோது அனைத்து நடிகர்களையும் ஒன்று திரட்டி மலேசியா, சிங்கப்பூர் என கலை நிகழ்ச்சிகள் நடத்தி அந்தக் கடனை அடைத்து லாபத்தையும் ஈட்டுக் கொடுத்தார் விஜயகாந்த். அது போன்று எவராலும் செய்ய முடியாது. 24 மணி நேரமும் பசியோடு இருந்தவர்களுக்கு உணவளித்த வள்ளல் அவர் என்று வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
தோள் கொடுத்த விஜயகாந்த்
ஒருமுறை சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு குரூப் தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்திருந்த காலகட்டத்தில் அந்த குரூப் அடுத்ததாக தானுவை குறி வைத்துள்ளதாக விஜயகாந்தின் காதுகளுக்கு செய்திகள் போய்யுள்ளது. உடனே தாணுவிற்கு கால் செய்து,"சார் உங்களதான் அந்த குரூப் டார்கெட் பண்ணி இருக்காங்க. உங்கள தொட்டாங்க நானே களத்துல எறங்குவேன்" என்று தனக்கு உறுதுணையாக இருந்ததாக தானு விஜயகாந்த் பற்றி பல நெகிழ்வான சம்பவங்களை கூறியுள்ளார்.