பாரதிராஜா தலைமையில் இன்று 'நத்திங் பட் விண்ட்'!

சென்னை சங்கீத நாடக சபையில் (மியூசிக் அகாடமி) மாலை 7 மணிக்குத் துவங்கும் இந்த விழாவுக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை வகிக்கிறார். கவிஞர் வாலி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.
இசைஞானி இளையராஜாவின் 67 வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரைக் கவுரவிக்க, அவரது மகள் பவதாரிணி நடத்தும் இசை நிகழ்ச்சி இது. மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலகின் பிரபலமான பின்னணி பாடகர்கள் பாடுகிறார்கள்.
இரவு 9 மணி வரை நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு நத்திங் பட் விண்ட் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் பெயரில் 25 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா உருவாக்கிய இசை ஆல்பம் விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. பண்டிட் ஹரிபிரசாத் சௌராஸியா இதில் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தார். சர்வதேச அளவில் மிகப் பிரபலமான இசை ஆல்பங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற சில இசைக் கோர்வைகளையும் விழாவில் தரப் போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











