Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இளையராஜாவும் ஏஆர் ரஹ்மானும் இணையும் பாடல்!
இது படத்துக்காக அல்ல... இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட!
இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவர் சி கல்யாண் தெரிவித்தார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக இந்தப் பாடல் இடம்பெறவிருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
இருவருமே இந்தக் கோரிக்கையை புன்னகையுடன் கேட்டுக் கொண்டாலும், இன்னும் அதுகுறித்து உறுதியான பதிலைச் சொல்லவில்லையாம்.
இதுகுறித்து கல்யாண் கூறுகையில், "பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆயினும், விரைவில் அந்த உன்னதமான பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்தப் பாடல் அரங்கத்தில் நிகழ்த்தப்படும்," என்றார்.