Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இளையராஜாவின் சிம்பொனி: மீண்டும் சர்ச்சை! இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவான திருவாசகம் ஆல்பம் குறித்துமீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம், இளையராஜாவின் இன்னிசையில்வெளியானது. முதலில் இளையராஜாவின் சிம்பொனியில் திருவாசகம் என்று இதுவிளம்பரப்படுத்தப்பட்டது.ஆனால் இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இது சிம்பொனி இசைஅல்ல, ஆரட்டோரியா என்ற வகையைச் சேர்ந்தது என்று இளையராஜா விளக்கினார்.இருப்பினும் திருவாசகம் இசை ஆல்பம் வெளியிடப்பட்டபோது, சிம்பொனிஆரட்டோரியா என்ற பெயரில் இது விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த ஆல்பத்தைசென்னை சாந்தோமைச் சேர்ந்த தமிழ் மையம் வெளியிட்டது.தற்போது இந்த மையத்தின் தலைவரான பாதிரியார் ஜெகத்கஸ்பார் மீது தமிழ்நாடுபிஷப் கவுன்சிலில், இசை ஆர்வலர் தினகரன் என்பவர் புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார்.இதுகுறித்து தினகரன் கூறுகையில், திருவாசகத்தை சிம்பொனியில் இசையமைத்ததாகமுன்பு இளையராஜா கூறியிருந்தார். பின்னர் அவரே இது சிம்பொனி அல்ல,ஆரட்டோரியா என்று மாற்றிக் கொண்டார்.ஆனால் தமிழ் மையம் சார்பில் இந்த ஆல்பத்தை வெளியிட்ட விழாவில் பாதிரியார்ஜெகத் கஸ்பார், இது சிம்பொனி ஆரட்டோரியா என கூறினார். தொடர்ந்தும் கூறிவருகிறார்.இது தவறான பிரசாரமாகும். சிம்பொனி ஆரட்டோரியா என்ற ஒரு இசை வகையேஎங்கும் கிடையாது. எனவே அவர் மீது கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு,தமிழ்நாடு பிஷப் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பாக கஸ்பாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளார் தினகரன்.இசைஞானியின் இசையை குறைத்து மதிப்பிட்டு விடும் நிலையை இந்த சர்ச்சைஉருவாக்கி விட்டு விடக் கூடாது என்பதுதான் இசை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவான திருவாசகம் ஆல்பம் குறித்துமீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம், இளையராஜாவின் இன்னிசையில்வெளியானது. முதலில் இளையராஜாவின் சிம்பொனியில் திருவாசகம் என்று இதுவிளம்பரப்படுத்தப்பட்டது.ஆனால் இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இது சிம்பொனி இசைஅல்ல, ஆரட்டோரியா என்ற வகையைச் சேர்ந்தது என்று இளையராஜா விளக்கினார்.
இருப்பினும் திருவாசகம் இசை ஆல்பம் வெளியிடப்பட்டபோது, சிம்பொனிஆரட்டோரியா என்ற பெயரில் இது விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த ஆல்பத்தைசென்னை சாந்தோமைச் சேர்ந்த தமிழ் மையம் வெளியிட்டது.
தற்போது இந்த மையத்தின் தலைவரான பாதிரியார் ஜெகத்கஸ்பார் மீது தமிழ்நாடுபிஷப் கவுன்சிலில், இசை ஆர்வலர் தினகரன் என்பவர் புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தினகரன் கூறுகையில், திருவாசகத்தை சிம்பொனியில் இசையமைத்ததாகமுன்பு இளையராஜா கூறியிருந்தார். பின்னர் அவரே இது சிம்பொனி அல்ல,ஆரட்டோரியா என்று மாற்றிக் கொண்டார்.
ஆனால் தமிழ் மையம் சார்பில் இந்த ஆல்பத்தை வெளியிட்ட விழாவில் பாதிரியார்ஜெகத் கஸ்பார், இது சிம்பொனி ஆரட்டோரியா என கூறினார். தொடர்ந்தும் கூறிவருகிறார்.இது தவறான பிரசாரமாகும். சிம்பொனி ஆரட்டோரியா என்ற ஒரு இசை வகையேஎங்கும் கிடையாது. எனவே அவர் மீது கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு,தமிழ்நாடு பிஷப் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக கஸ்பாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளார் தினகரன்.
இசைஞானியின் இசையை குறைத்து மதிப்பிட்டு விடும் நிலையை இந்த சர்ச்சைஉருவாக்கி விட்டு விடக் கூடாது என்பதுதான் இசை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!