twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைஞானி-கவியரசு-இயக்குனர் இமயம் தமிழ் திரையுலகில் சகாப்தம் படைத்த மூன்று ராஜாக்கள் மீண்டும் இணைந்து கலக்கப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக ஒருபேச்சு அடிபடுகிறது.இசையில் சரித்திரம் படைத்த இளையராஜா, இயக்கத்தில் சாதனை படைத்த பாரதிராஜா, திரையிசைப் பாடல்களில்திருப்புமுனையை ஏற்படுத்திய வைரமுத்து என இந்த மூன்று திரையுலக ராஜாக்களும்தான் மீண்டும் கைகோர்க்கப்போகிறார்கள்.இந்த மூன்று முத்துக்களும் சேர்ந்து கொடுத்த பல சத்தான படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மனதிலிருந்து இன்னும் நீங்காமல்,ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் காலம் செய்த கோலத்தால் மூன்று பேரும் ஆளுக்கொரு திசையில் போய்விட்டார்கள்.அதிலும் வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் போய்விட்டது. பாரதிராஜாவின் தாயார்மறைந்தபோது அங்கு போன இளையராஜாவையும் வைரமுத்துவையும் இரண்டு பக்கமும் உட்கார வைத்துக் கொண்டு அழுதார்பாரதிராஜா.ஆனால், அப்போது கூட வைரமுத்துவும் இளையராஜாவும் பேசிக் கொள்ளவில்லை. அவர்களுக்குள் அப்படி ஒரு இறுக்கம்.அதை உடைக்க தீவிரமாய் முயன்று பார்த்து தோற்றுவிட்டார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.திசை மாறிப் போனாலும் மூன்று பேரும் சோடை போகாமல், பல சாதனைகளைப் படைத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு வழிவிட்டுள்ளார்கள். பாரதிராஜா, வைரமுத்து இல்லாமலும், இளையராஜா இமயத்தைத் தொட்டுக் காட்டினார்.இளையராஜா பிரிந்தாலும் கூட, பாரதிராஜாவும், வைரமுத்துவும் சேர்ந்து தொடர்ந்து பல படங்கள் செய்தார்கள். இருந்தாலும்,இளையராஜா இல்லாத குறை பாரதிராஜாவின் படங்களில் தெரியத்தான் செய்தது. அதை பாரதிராஜாவும் அவ்வப்போது ஒத்துக்கொண்டே இருக்கிறார்.பிரிந்து போன இந்த மூன்று பிரம்மாக்களையும் இணைக்கும் இமாலய முயற்சியில் இன்னொரு ராஜா தீவிரமாககளமிறங்கியிருக்கிறார்.அவர் ரஜினியின் சம்மந்தியான கஸ்தூரி ராஜா. தனது அடுத்த படத்தில்தான் இந்த மூன்று ராஜாக்களையும் இணைக்க பிரம்மப்பிரயத்தனம் செய்து வருகிறாராம்.கஸ்தூரிராஜா அடுத்துத் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கித் தருமாறு பாரதிராஜாவைக் கேட்டுக் கொண்டாராம். அப்போது,பாரதிராஜா, இந்தப் படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க உன்னால் முடியுமா? என்று கேட்டுள்ளார். கண்டிப்பாகமுடியும் என்று கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.அதற்கு பாரதிராஜா, ஆனால் அதேசமயம், எனக்கு வைரமுத்துவும் வேண்டும் என்று கூறி நிறுத்தியுள்ளார். சிறிது யோசித்துப்பார்த்த கஸ்தூரி ராஜா, அதையும் முடித்துக் காட்டுகிறேன் என்று கூறி களத்தில் குதித்து விட்டார்.இளையராஜாவுக்கு கஸ்தூரிராஜா நல்ல நெருக்கம் என்பது கோலிவுட் அறிந்தது தான்.இந் நிலையில் இளையராஜா, வைரமுத்துவிடம் இதுகுறித்துப் பேசியுள்ள கஸ்தூரி ராஜா, இருவரும் சாதகமாக பதில் தருவார்கள்என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். பாரதிராஜாவும் தன் பங்குக்கு இருவருடனும் பேசி வருகிறாராம். பாரதிராஜா இயக்கவுள்ள இந்தப் படம் மீண்டும் பதினாறு வயதினிலே மயிலு குறித்தது தானாம்.சந்தைக்கு போணும்.. ஆத்தா வையும்.. மூணு பேரும் ஒன்னா சேருங்கப்பா...

    By Staff
    |

    தமிழ் திரையுலகில் சகாப்தம் படைத்த மூன்று ராஜாக்கள் மீண்டும் இணைந்து கலக்கப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக ஒருபேச்சு அடிபடுகிறது.

    இசையில் சரித்திரம் படைத்த இளையராஜா, இயக்கத்தில் சாதனை படைத்த பாரதிராஜா, திரையிசைப் பாடல்களில்திருப்புமுனையை ஏற்படுத்திய வைரமுத்து என இந்த மூன்று திரையுலக ராஜாக்களும்தான் மீண்டும் கைகோர்க்கப்போகிறார்கள்.

    இந்த மூன்று முத்துக்களும் சேர்ந்து கொடுத்த பல சத்தான படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மனதிலிருந்து இன்னும் நீங்காமல்,ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் காலம் செய்த கோலத்தால் மூன்று பேரும் ஆளுக்கொரு திசையில் போய்விட்டார்கள்.

    அதிலும் வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் போய்விட்டது. பாரதிராஜாவின் தாயார்மறைந்தபோது அங்கு போன இளையராஜாவையும் வைரமுத்துவையும் இரண்டு பக்கமும் உட்கார வைத்துக் கொண்டு அழுதார்பாரதிராஜா.


    ஆனால், அப்போது கூட வைரமுத்துவும் இளையராஜாவும் பேசிக் கொள்ளவில்லை. அவர்களுக்குள் அப்படி ஒரு இறுக்கம்.அதை உடைக்க தீவிரமாய் முயன்று பார்த்து தோற்றுவிட்டார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

    திசை மாறிப் போனாலும் மூன்று பேரும் சோடை போகாமல், பல சாதனைகளைப் படைத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு வழிவிட்டுள்ளார்கள். பாரதிராஜா, வைரமுத்து இல்லாமலும், இளையராஜா இமயத்தைத் தொட்டுக் காட்டினார்.

    இளையராஜா பிரிந்தாலும் கூட, பாரதிராஜாவும், வைரமுத்துவும் சேர்ந்து தொடர்ந்து பல படங்கள் செய்தார்கள். இருந்தாலும்,இளையராஜா இல்லாத குறை பாரதிராஜாவின் படங்களில் தெரியத்தான் செய்தது. அதை பாரதிராஜாவும் அவ்வப்போது ஒத்துக்கொண்டே இருக்கிறார்.

    பிரிந்து போன இந்த மூன்று பிரம்மாக்களையும் இணைக்கும் இமாலய முயற்சியில் இன்னொரு ராஜா தீவிரமாககளமிறங்கியிருக்கிறார்.

    அவர் ரஜினியின் சம்மந்தியான கஸ்தூரி ராஜா. தனது அடுத்த படத்தில்தான் இந்த மூன்று ராஜாக்களையும் இணைக்க பிரம்மப்பிரயத்தனம் செய்து வருகிறாராம்.

    கஸ்தூரிராஜா அடுத்துத் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கித் தருமாறு பாரதிராஜாவைக் கேட்டுக் கொண்டாராம். அப்போது,பாரதிராஜா, இந்தப் படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க உன்னால் முடியுமா? என்று கேட்டுள்ளார். கண்டிப்பாகமுடியும் என்று கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.


    அதற்கு பாரதிராஜா, ஆனால் அதேசமயம், எனக்கு வைரமுத்துவும் வேண்டும் என்று கூறி நிறுத்தியுள்ளார். சிறிது யோசித்துப்பார்த்த கஸ்தூரி ராஜா, அதையும் முடித்துக் காட்டுகிறேன் என்று கூறி களத்தில் குதித்து விட்டார்.

    இளையராஜாவுக்கு கஸ்தூரிராஜா நல்ல நெருக்கம் என்பது கோலிவுட் அறிந்தது தான்.

    இந் நிலையில் இளையராஜா, வைரமுத்துவிடம் இதுகுறித்துப் பேசியுள்ள கஸ்தூரி ராஜா, இருவரும் சாதகமாக பதில் தருவார்கள்என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். பாரதிராஜாவும் தன் பங்குக்கு இருவருடனும் பேசி வருகிறாராம்.

    பாரதிராஜா இயக்கவுள்ள இந்தப் படம் மீண்டும் பதினாறு வயதினிலே மயிலு குறித்தது தானாம்.

    சந்தைக்கு போணும்.. ஆத்தா வையும்.. மூணு பேரும் ஒன்னா சேருங்கப்பா...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X