twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திக்குப் போகும் இலியானா இம்சை அரசி இலியானா தெலுங்கை ஒரு கை பார்த்து விட்டு இப்போது இந்திக்கும் போகிறார்.தெலுங்கில் இலியானா நடித்த போக்கிரி, அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.போக்கிரி படத்தின் வசூல் மழையால் இலியானாவுக்கு படங்கள் குவிய தொடங்கின.ஒரே படத்தின் மூலம் பெரும் ஹிட் ஆகி விட்ட இலியானா, தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார். அவர்எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் இருப்பதால், தன்னைத் தேடிவந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து வருகிறார் இலியானா.தமிழில் அவர் நடித்துள்ள ஒரே படம் கேடி மட்டுமே. அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்தெலுங்குககாரர் என்பதால்தான் கேடி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் இலியானா.போக்கிரியின் தமிழ்ப் பதிப்பில், இலியானாவை நடிக்க வைக்க விஜய் பிரம்மப் பிரயத்தனம் செய்தார். ஆனால்டபாய்த்து விட்டார் இலியானா. இப்படி தெலுங்கு மட்டுமே, தெலுங்கைத் தவிர வேறு யாரும் தேவையில்லைஎன்று படா தெனாவட்டாக இருந்து வரும் இலியானா இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம்.தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான அத்தடு இந்திக்குப் போகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் பாபிதியோலும், திரிஷா வேடத்தில் இலியானாவும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன்தான்இப்படத்தை இயக்கப் போகிறார்.இந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் இலியானா நடிக்க மாட்டார் என்பது போல இலியானாவின்அம்மா பேசத் தொடங்கியுள்ளாராம். இதனால் தெலுங்குத் திரையுலகினரும் கூட அப்செட் ஆகியுள்ளனர்.இலியானாவின் இந்த அடாவடியான போக்கு அவரது கேரியருக்கு சீக்கிரமே பெரிய பேரியராக மாறக் கூடியவாய்ப்புகள் உள்ளதாக தமிழ் சினிமாக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.

    By Staff
    |
    இம்சை அரசி இலியானா தெலுங்கை ஒரு கை பார்த்து விட்டு இப்போது இந்திக்கும் போகிறார்.

    தெலுங்கில் இலியானா நடித்த போக்கிரி, அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.போக்கிரி படத்தின் வசூல் மழையால் இலியானாவுக்கு படங்கள் குவிய தொடங்கின.

    ஒரே படத்தின் மூலம் பெரும் ஹிட் ஆகி விட்ட இலியானா, தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார். அவர்எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் இருப்பதால், தன்னைத் தேடிவந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து வருகிறார் இலியானா.

    தமிழில் அவர் நடித்துள்ள ஒரே படம் கேடி மட்டுமே. அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்தெலுங்குககாரர் என்பதால்தான் கேடி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் இலியானா.

    போக்கிரியின் தமிழ்ப் பதிப்பில், இலியானாவை நடிக்க வைக்க விஜய் பிரம்மப் பிரயத்தனம் செய்தார். ஆனால்டபாய்த்து விட்டார் இலியானா. இப்படி தெலுங்கு மட்டுமே, தெலுங்கைத் தவிர வேறு யாரும் தேவையில்லைஎன்று படா தெனாவட்டாக இருந்து வரும் இலியானா இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம்.

    தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான அத்தடு இந்திக்குப் போகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் பாபிதியோலும், திரிஷா வேடத்தில் இலியானாவும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன்தான்இப்படத்தை இயக்கப் போகிறார்.

    இந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் இலியானா நடிக்க மாட்டார் என்பது போல இலியானாவின்அம்மா பேசத் தொடங்கியுள்ளாராம். இதனால் தெலுங்குத் திரையுலகினரும் கூட அப்செட் ஆகியுள்ளனர்.

    இலியானாவின் இந்த அடாவடியான போக்கு அவரது கேரியருக்கு சீக்கிரமே பெரிய பேரியராக மாறக் கூடியவாய்ப்புகள் உள்ளதாக தமிழ் சினிமாக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X