twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இம்சைக்கு சிக்கல் வடிவேலு நடித்து திரைக்கு வர காத்திருக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்துக்கு புதிய சிக்கல்எழுந்துள்ளது.வடிவேலு, நந்திதா, லக்ஷா, நாசர் உள்ளிட்டோர் நடிக்க சிம்புத்தேவன் இயக்கத்தில் தயாரான முழு நீளநகைச்சுவைப் படம் இது.இப்படத்தில் வடிவேல் குதிரை சவாரி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சிக்கு படத்தின்தயாரிப்பாளர் ஷங்கர் தரப்பு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறதால் திரைப்படம் திரையிட சிக்கல்ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.மத்திய அரசின் மிருக வதைத் தடுப்பு சட்டப்படி திரைப்படங்களில் மிருகங்களை பயன்படுத்தினால் விலங்குகள்நல வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். மேலும் திரைபடங்களில் விலங்குகளை பயன்படுத்த சிலவிதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.அதன்படி படத்தில் மிருகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால்நடை மருத்துவர் கூடவே இருக்க வேண்டும்.படம் முடிவடைந்த பிறகு கால்நடை மருத்துவர் விலங்குகளின் உடல் நலன் குறித்து சான்றிதழ் கொடுக்கவேண்டும். அப்படி சான்றிதழ் கொடுத்தால் தான் படம் திரைக்கு வர முடியும் என்கிறது மத்திய அரசின் சட்டம்கூறுகிறது.சமீபத்தில் இந்தியா முழுவதும் 64 படங்கள் விலங்குகள் நல வாரியத்தில் அனுமதிக்காக காத்திருக்கின்றன. அதில்இம்சை அரசன் 23 ம் புலிகேசி படமும் ஒன்று. இந்தப் படம் வரும் 26 ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் விலங்குகள்நல வாரியம் அனுமதி கொடுக்கதால், படம் ரீலிஸ் தள்ளி போகும் என தெரிகிறது.இந்த நிபந்தனைகள் பட அதிபர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி நீதிமன்றத்தை அனுகவும் சில பட அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனார்.

    By Staff
    |

    வடிவேலு நடித்து திரைக்கு வர காத்திருக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்துக்கு புதிய சிக்கல்எழுந்துள்ளது.

    வடிவேலு, நந்திதா, லக்ஷா, நாசர் உள்ளிட்டோர் நடிக்க சிம்புத்தேவன் இயக்கத்தில் தயாரான முழு நீளநகைச்சுவைப் படம் இது.

    இப்படத்தில் வடிவேல் குதிரை சவாரி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சிக்கு படத்தின்தயாரிப்பாளர் ஷங்கர் தரப்பு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறதால் திரைப்படம் திரையிட சிக்கல்ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மத்திய அரசின் மிருக வதைத் தடுப்பு சட்டப்படி திரைப்படங்களில் மிருகங்களை பயன்படுத்தினால் விலங்குகள்நல வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். மேலும் திரைபடங்களில் விலங்குகளை பயன்படுத்த சிலவிதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

    அதன்படி படத்தில் மிருகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால்நடை மருத்துவர் கூடவே இருக்க வேண்டும்.படம் முடிவடைந்த பிறகு கால்நடை மருத்துவர் விலங்குகளின் உடல் நலன் குறித்து சான்றிதழ் கொடுக்கவேண்டும். அப்படி சான்றிதழ் கொடுத்தால் தான் படம் திரைக்கு வர முடியும் என்கிறது மத்திய அரசின் சட்டம்கூறுகிறது.

    சமீபத்தில் இந்தியா முழுவதும் 64 படங்கள் விலங்குகள் நல வாரியத்தில் அனுமதிக்காக காத்திருக்கின்றன. அதில்இம்சை அரசன் 23 ம் புலிகேசி படமும் ஒன்று.

    இந்தப் படம் வரும் 26 ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் விலங்குகள்நல வாரியம் அனுமதி கொடுக்கதால், படம் ரீலிஸ் தள்ளி போகும் என தெரிகிறது.

    இந்த நிபந்தனைகள் பட அதிபர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி நீதிமன்றத்தை அனுகவும் சில பட அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X