Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இம்சைக்கு சிக்கல் வடிவேலு நடித்து திரைக்கு வர காத்திருக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்துக்கு புதிய சிக்கல்எழுந்துள்ளது.வடிவேலு, நந்திதா, லக்ஷா, நாசர் உள்ளிட்டோர் நடிக்க சிம்புத்தேவன் இயக்கத்தில் தயாரான முழு நீளநகைச்சுவைப் படம் இது.இப்படத்தில் வடிவேல் குதிரை சவாரி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சிக்கு படத்தின்தயாரிப்பாளர் ஷங்கர் தரப்பு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறதால் திரைப்படம் திரையிட சிக்கல்ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.மத்திய அரசின் மிருக வதைத் தடுப்பு சட்டப்படி திரைப்படங்களில் மிருகங்களை பயன்படுத்தினால் விலங்குகள்நல வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். மேலும் திரைபடங்களில் விலங்குகளை பயன்படுத்த சிலவிதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.அதன்படி படத்தில் மிருகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால்நடை மருத்துவர் கூடவே இருக்க வேண்டும்.படம் முடிவடைந்த பிறகு கால்நடை மருத்துவர் விலங்குகளின் உடல் நலன் குறித்து சான்றிதழ் கொடுக்கவேண்டும். அப்படி சான்றிதழ் கொடுத்தால் தான் படம் திரைக்கு வர முடியும் என்கிறது மத்திய அரசின் சட்டம்கூறுகிறது.சமீபத்தில் இந்தியா முழுவதும் 64 படங்கள் விலங்குகள் நல வாரியத்தில் அனுமதிக்காக காத்திருக்கின்றன. அதில்இம்சை அரசன் 23 ம் புலிகேசி படமும் ஒன்று. இந்தப் படம் வரும் 26 ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் விலங்குகள்நல வாரியம் அனுமதி கொடுக்கதால், படம் ரீலிஸ் தள்ளி போகும் என தெரிகிறது.இந்த நிபந்தனைகள் பட அதிபர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி நீதிமன்றத்தை அனுகவும் சில பட அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனார்.
வடிவேலு நடித்து திரைக்கு வர காத்திருக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்துக்கு புதிய சிக்கல்எழுந்துள்ளது.
வடிவேலு, நந்திதா, லக்ஷா, நாசர் உள்ளிட்டோர் நடிக்க சிம்புத்தேவன் இயக்கத்தில் தயாரான முழு நீளநகைச்சுவைப் படம் இது.
மத்திய அரசின் மிருக வதைத் தடுப்பு சட்டப்படி திரைப்படங்களில் மிருகங்களை பயன்படுத்தினால் விலங்குகள்நல வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். மேலும் திரைபடங்களில் விலங்குகளை பயன்படுத்த சிலவிதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
அதன்படி படத்தில் மிருகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால்நடை மருத்துவர் கூடவே இருக்க வேண்டும்.படம் முடிவடைந்த பிறகு கால்நடை மருத்துவர் விலங்குகளின் உடல் நலன் குறித்து சான்றிதழ் கொடுக்கவேண்டும். அப்படி சான்றிதழ் கொடுத்தால் தான் படம் திரைக்கு வர முடியும் என்கிறது மத்திய அரசின் சட்டம்கூறுகிறது.
சமீபத்தில் இந்தியா முழுவதும் 64 படங்கள் விலங்குகள் நல வாரியத்தில் அனுமதிக்காக காத்திருக்கின்றன. அதில்இம்சை அரசன் 23 ம் புலிகேசி படமும் ஒன்று.
இந்தப் படம் வரும் 26 ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் விலங்குகள்நல வாரியம் அனுமதி கொடுக்கதால், படம் ரீலிஸ் தள்ளி போகும் என தெரிகிறது.