Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சர்வதேச திரைப்பட விழா... முதல்வருக்கு அழைப்பு!
சென்னையில் 7வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில், 40 நாடுகளைச் சேர்ந்த 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இவ்விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதியை, திரைப்பட இயக்குநர் பி.வாசு, நடிகை குஷ்பு ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பி.வாசு, கடந்த வருடம் இந்த விழாவை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதேபோல் இந்த வருடமும் இந்த விழாவை துவங்கி வைக்க அவரை அழைத்துள்ளோம் என்றார்.
நடிகை குஷ்பு கூறுகையில், இந்த விழா முழுக்க முழுக்க திரைப்பட கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த விழாவைக் காண இவர்கள் கோவா போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதை சென்னையில் நடத்த முடிவு செய்து தற்போது விழா நடத்துகிறோம். இதை திரைப்பட கல்லூரி மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க சம்மேளத்தின் புதிய நிர்வாகிகள், அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.