தாயில்லாமல் முதல் பிறந்தநாள்: ஸ்ரீதேவியின் மகள் யாருடன் கொண்டாடினார் தெரியுமா?
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது 21வது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நேற்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். அம்மா செல்லமான அவர் முதல் முறையாக தாயில்லாமல் பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜான்வி
ஜான்வி தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அங்கிருந்த முதியவர்கள் ஜான்விக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தாய்
ஜான்வி பிறந்தநாள் கேக்குகளை கட் செய்யும் முன்பு கண்களை மூடி தாயை நினைத்துக் கொண்டார். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாராட்டு
ஜான்வியும், குஷியும் தைரியமாக இருப்பதை பார்த்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவர்களை பாராட்டியுள்ளனர். ஸ்ரீதேவியின் வளர்ப்பை நினைத்து பெருமைப்படுவதாக நடிகை சுஷ்மிதா சென் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர்.

அன்சுலா கபூர்
போனி கபூரின் முதல் மனைவியின் பிள்ளைகளான நடிகர் அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் ஆகியோர் தங்கைகளான ஜான்வி, குஷிக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் உள்ளனர்.

ஸ்ரீதேவி
அம்மாவை பார்த்து எப்படி பெருமைப்பட்டேனோ அதே போன்று அவர் என்னை பார்த்து பெருமைப்படும்படி நடந்து கொள்வேன் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











