twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பளத்தை தூக்கிய ஜோ, நயன்தாரா கி.மு., கி.பி. மாதிரி ஜோதிகா, நயனதாரா ஆகியோரின் சம்பளத்தை ச.மு., ச.பி. என்று பிரிக்கலாம் போலிருக்கிறது. இருவருமேசந்திரமுகிக்குப் பின் (ச.மு.) சம்பளத்தை ஏற்றிவிட்டனர்.சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்ற போட்டா போட்டியில் இருந்தவர்கள் ஜோதிகாவும்சிம்ரனும்.இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி ஓவர் டேக் செய்து வந்தனர். இறுதியாக ரூ. 40 லட்சம் சம்பளம் என்று சிம்ரனை ஓவர் டேக்செய்தார் ஜோதிகா.அதன் பின் ஓவராகவே டேக் செய்து அடுத்த மெயின் ரோட்டைப் பிடித்த சிம்ரன், அப்படியே கல்யாணமாகி செட்டிலாகிவிட்டார்.ஆனால், ஜோதிகாவின் வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும், சம்பளத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. கடைசியாக ரூ. 30லட்சத்துக்கு வந்தார்.இந் நிலையில் சந்திரமுகியில் இவர் உருட்டிய முட்டைக் கண்களுக்கு தமிழகத்தில் பெண்கள் மத்தியில் அப்படி ஒரு கிரேஸ்ஏற்பட்டுவிட்டது. இதை பணமாக்கும் முயற்சியில் ஜோதிகாவைத் தேடிப் போகும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும்கணிசமாக உயர்ந்திருக்கிறது.இதையடுத்து ஜோதிகா தனது சம்பளத்தை மீண்டும் ரூ. 35 லட்சமாக உயர்த்திவிட்டார்.ரேட்டை உயர்த்திவிட்டு, அதைத் தருகிற எல்லா தயாரிப்பாளர்களிடம் கையை நீட்டாமல் நிதானப் போக்கையேகடைப்பிடிக்கிறாராம். கதை நன்றாக இருந்தால் மட்டுமே சம்பளம் பற்றிப் பேசவே வருகிறார்.புதிய சம்பளத்தில் இதுவரை புதிய படம் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.சம்பள விஷயத்தில் ஜோதிகாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஸ்னேகா. ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் வரை வாங்கி வருகிறார்.இப்போது ஸ்னேகாவின் மார்க்கெட் இறங்கு முகத்தில் உள்ளதால், கவர்ச்சிக்குத் தாவி சமாளித்துக் கொண்டிருக்கிறார். இதனால்அவர் சம்பளத்தை ஏற்ற வாய்ப்பில்லை.அதே மாதிரியே சந்திரமுகியை வைத்து ஜோ சம்பளத்தை உயர்த்தியது மாதிரியே நயனதாராவும் தனது சம்பளத்தைகண்ணாபின்னவென உயர்த்திவிட்டார். ரூ. 3 லட்சத்துக்கு ஐயா படத்துக்கு நடிக்க வந்தவர், இப்போது ரூ. 20 லட்சத்துக்குத்தாவிவிட்டார்.ச.முகியை வைத்து ஜோவும் நயனும் செய்தது மாதிரியே, அந்நியன் ரிலீஸுக்குப் பிறகு தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில்இருக்கிறாராம் சதா. இப்போது ரூ. 15 லகரம் முதல் ரூ. 20 லட்சத்துக்குப் படிந்து வரும் இவர், அந்நியன் வந்த பின் அதை ரூ. 25லட்சமாக்கப் போகிறாராம்.இவ்வாறு ஒரு ஸ்டான்டர்ட் சம்பளம் என்று எதையும் வைத்துக் கொள்ளாதவர் நமிதா. ஓல்டு நடிகர்களுடன் நடிக்க ரூ. 10 லட்சம்,இளசுகள் என்றால் கொஞ்சம் கம்மி சம்பளம். கவர்ச்சி தூக்கலா வேணுமா.. அதுக்கு சில லகரம் என்று ஊறுகாய் மாதிரி தன்னையேரக, ரகமாகப் பிரித்து விற்றுக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் கவர்ச்சிப் போட்டிக்கு வந்த கோபிகா ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 வரை கேட்கிறார்.கொட்டிக் கொடுக்க கோலிவுட்காரர்கள் தயாராக இருக்கும் வரை இந்த அம்மணிகள் காட்டில் மழைக்கா பஞ்சம்.

    By Staff
    |

    கி.மு., கி.பி. மாதிரி ஜோதிகா, நயனதாரா ஆகியோரின் சம்பளத்தை ச.மு., ச.பி. என்று பிரிக்கலாம் போலிருக்கிறது. இருவருமேசந்திரமுகிக்குப் பின் (ச.மு.) சம்பளத்தை ஏற்றிவிட்டனர்.

    சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்ற போட்டா போட்டியில் இருந்தவர்கள் ஜோதிகாவும்சிம்ரனும்.

    இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி ஓவர் டேக் செய்து வந்தனர். இறுதியாக ரூ. 40 லட்சம் சம்பளம் என்று சிம்ரனை ஓவர் டேக்செய்தார் ஜோதிகா.

    அதன் பின் ஓவராகவே டேக் செய்து அடுத்த மெயின் ரோட்டைப் பிடித்த சிம்ரன், அப்படியே கல்யாணமாகி செட்டிலாகிவிட்டார்.

    ஆனால், ஜோதிகாவின் வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும், சம்பளத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. கடைசியாக ரூ. 30லட்சத்துக்கு வந்தார்.

    இந் நிலையில் சந்திரமுகியில் இவர் உருட்டிய முட்டைக் கண்களுக்கு தமிழகத்தில் பெண்கள் மத்தியில் அப்படி ஒரு கிரேஸ்ஏற்பட்டுவிட்டது. இதை பணமாக்கும் முயற்சியில் ஜோதிகாவைத் தேடிப் போகும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும்கணிசமாக உயர்ந்திருக்கிறது.

    இதையடுத்து ஜோதிகா தனது சம்பளத்தை மீண்டும் ரூ. 35 லட்சமாக உயர்த்திவிட்டார்.

    ரேட்டை உயர்த்திவிட்டு, அதைத் தருகிற எல்லா தயாரிப்பாளர்களிடம் கையை நீட்டாமல் நிதானப் போக்கையேகடைப்பிடிக்கிறாராம். கதை நன்றாக இருந்தால் மட்டுமே சம்பளம் பற்றிப் பேசவே வருகிறார்.

    புதிய சம்பளத்தில் இதுவரை புதிய படம் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

    சம்பள விஷயத்தில் ஜோதிகாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஸ்னேகா. ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் வரை வாங்கி வருகிறார்.இப்போது ஸ்னேகாவின் மார்க்கெட் இறங்கு முகத்தில் உள்ளதால், கவர்ச்சிக்குத் தாவி சமாளித்துக் கொண்டிருக்கிறார். இதனால்அவர் சம்பளத்தை ஏற்ற வாய்ப்பில்லை.

    அதே மாதிரியே சந்திரமுகியை வைத்து ஜோ சம்பளத்தை உயர்த்தியது மாதிரியே நயனதாராவும் தனது சம்பளத்தைகண்ணாபின்னவென உயர்த்திவிட்டார். ரூ. 3 லட்சத்துக்கு ஐயா படத்துக்கு நடிக்க வந்தவர், இப்போது ரூ. 20 லட்சத்துக்குத்தாவிவிட்டார்.

    ச.முகியை வைத்து ஜோவும் நயனும் செய்தது மாதிரியே, அந்நியன் ரிலீஸுக்குப் பிறகு தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில்இருக்கிறாராம் சதா. இப்போது ரூ. 15 லகரம் முதல் ரூ. 20 லட்சத்துக்குப் படிந்து வரும் இவர், அந்நியன் வந்த பின் அதை ரூ. 25லட்சமாக்கப் போகிறாராம்.

    இவ்வாறு ஒரு ஸ்டான்டர்ட் சம்பளம் என்று எதையும் வைத்துக் கொள்ளாதவர் நமிதா. ஓல்டு நடிகர்களுடன் நடிக்க ரூ. 10 லட்சம்,இளசுகள் என்றால் கொஞ்சம் கம்மி சம்பளம். கவர்ச்சி தூக்கலா வேணுமா.. அதுக்கு சில லகரம் என்று ஊறுகாய் மாதிரி தன்னையேரக, ரகமாகப் பிரித்து விற்றுக் கொண்டிருக்கிறார்.

    சமீபத்தில் கவர்ச்சிப் போட்டிக்கு வந்த கோபிகா ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 வரை கேட்கிறார்.

    கொட்டிக் கொடுக்க கோலிவுட்காரர்கள் தயாராக இருக்கும் வரை இந்த அம்மணிகள் காட்டில் மழைக்கா பஞ்சம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X