twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோ-சூர்யா கல்யாணம் எங்கே? புலி வரப் போகுது வரப் போகுது என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் புலி வந்தேவிட்டது. ஜோதிகாவும், சூர்யாவும் ஒரு வழியாக வாழ்க்கையில் இணையப்போகிறார்கள். இவர்களது திருமணம் எங்கே நடைபெறும் என்பதை சூர்யாவின் தந்தை சிவக்குமார்அறிவிக்கவில்லை. படு ரகசியமாக அந்த இடத்தை வைத்திருக்கிறார்கள்.ஆனால் சூர்யாவின் தங்கை பிருந்தாவுக்கு நடந்ததைப் போல நட்சத்திரஹோட்டலில்தான் சூர்யா திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல், நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல்,அடையாறு பார்க் ஷெரட்டன் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் திருமணம்நடக்கலாம். பார்க் ஷெரட்டன் ஹோட்டலில்தான் பிருந்தா திருமணம் நடந்தது.திருமணத்திற்கு இரு வீட்டையும் சேர்ந்த உறவினர்கள் மட்டுமேஅழைக்கப்படவுள்ளனர். திரையுலகினர், பிரபலங்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள்.அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்இதில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.12ம் தேதி நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் பெரும் கூட்டம் கூடவுள்ளது.சிவக்குமாருக்கு அரசியல், சினிமா தவிர பல தரப்பிலும் ஏராளமான நண்பர்கள்உண்டு.இதனால் வரவேற்பு நிகழ்ச்சி மிக பிரமாண்டமானதாக இருக்கும்.முக்கிய உறவினர்களுக்கு சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்று அழைப்பிதழைக்கொடுக்க உள்ளனராம்.கல்யாணத்தை ஒட்டி சூர்யா வீட்டில் தடபுடல் வேலைகள் தொடங்கி விட்டன.திருமணத்திற்குப் பின்னர் ஜோவும், சூர்யாவும் சுவிஸ் செல்கின்றனர்.

    By Staff
    |

    புலி வரப் போகுது வரப் போகுது என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் புலி வந்தேவிட்டது. ஜோதிகாவும், சூர்யாவும் ஒரு வழியாக வாழ்க்கையில் இணையப்போகிறார்கள்.

    இவர்களது திருமணம் எங்கே நடைபெறும் என்பதை சூர்யாவின் தந்தை சிவக்குமார்அறிவிக்கவில்லை. படு ரகசியமாக அந்த இடத்தை வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் சூர்யாவின் தங்கை பிருந்தாவுக்கு நடந்ததைப் போல நட்சத்திரஹோட்டலில்தான் சூர்யா திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

    கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல், நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல்,அடையாறு பார்க் ஷெரட்டன் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் திருமணம்நடக்கலாம். பார்க் ஷெரட்டன் ஹோட்டலில்தான் பிருந்தா திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு இரு வீட்டையும் சேர்ந்த உறவினர்கள் மட்டுமேஅழைக்கப்படவுள்ளனர். திரையுலகினர், பிரபலங்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள்.

    அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்இதில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

    12ம் தேதி நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் பெரும் கூட்டம் கூடவுள்ளது.சிவக்குமாருக்கு அரசியல், சினிமா தவிர பல தரப்பிலும் ஏராளமான நண்பர்கள்உண்டு.

    இதனால் வரவேற்பு நிகழ்ச்சி மிக பிரமாண்டமானதாக இருக்கும்.

    முக்கிய உறவினர்களுக்கு சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்று அழைப்பிதழைக்கொடுக்க உள்ளனராம்.

    கல்யாணத்தை ஒட்டி சூர்யா வீட்டில் தடபுடல் வேலைகள் தொடங்கி விட்டன.திருமணத்திற்குப் பின்னர் ஜோவும், சூர்யாவும் சுவிஸ் செல்கின்றனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X