Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஜோதிகா- ராம்கோபால் வர்மா- இசைஞானி தெலுங்கில் இருந்து இந்திப் போய் இப்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக விளங்கும் ராம்கோபால் வர்மாவும்இசைஞானியும் கைகோர்க்கிறார்கள்.இந்தப் படத்தை தயாரிக்கப் போவது ஜோதிகா. ஹீரோயின் ஜோதிகாவே தான். அப்ப ஹீரோ... வேறு யார் நம்ம சூர்யாவே தான்.மும்பை அண்டர்வோர்ல்ட்டின் நடந்த, நடக்கும் உண்மைச் சம்பவங்களை அதிரடி ரியலிசத்துடன் கொடுத்து எங்கேயோபோனவர் வர்மா. இதனால் தாதாக்களின் கோபத்துக்கு இலக்காகி இப்போது 24 மணி நேரமும் ஏ.கே-47 துப்பாக்கிகள் தாங்கிய 4பிரைவேட் செக்யூரிட்டிகளுடன் நடமாடி வரும் தில்லான இயக்குனர்.இவரை வைத்து சூர்யாவை ஹீரோவாக்கி ஒரு ஆக்ஷன் கலக்கல் படத்தை எடுக்க ஆசைப்பட்டாராம் ஜோதிகா. இதைராம்கோபால் வர்மாவுடன் ஜோதிகா சொல்ல, அட சூர்யாவை இயக்கனும்னு நானும் காத்துட்டு இருக்கேனே என்றாராம்.இதையடுத்து சூர்யாவும் ராம்கோபாலும் பேசி இசைக்கு இளையராஜாவைப் போடுவது என முடிவெடுத்தார்களாம்.ப்ராஜெக்ட் குறித்த ஆரம்ப பேச்சுவார்த்தை ஜெட் வேகத்தில் முடிந்துவிட, இப்போது கதையை உருவாக்கும் வேலையில்தீவிரமாக இருக்கிறார் வர்மா.ஜோதிகாவுக்காக தனது உறவினரை வைத்து (சூர்யா தான் பண உதவி என்கிறார்கள்) ஜில்லுனு ஒரு காதல் படத்தை எடுத்து வரும்சூர்யாவுக்கு நன்றிக் கடனாக தனது தயாரிப்பில் ராம்கோபால் வர்மா-இசைஞானி என்ற காம்பினேஷனில் பிரமாண்டமாய் படம்தயாரிக்கிறார் ஜோதிகா.ராம்கோபாலும் இளையராஜாவும் ஏற்கனவே தெலுங்கில் சிவா என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஆனால், தமிழில்இதுவே முதல் முறை.இதற்கிடையே சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிக்கும் பருத்தி வீரன் படத்தில் இளையராஜா ஒரு பாடலைப் பாட வேண்டும் எனஇயக்குனர் அமீர் விரும்பினாராம். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. அமீரின் விருப்பத்துக்காக பாட ஒப்புக் கொண்டார்இளையராஜா.இதையடுத்து அந்த ஒரு பாடலுக்கு சம்பளமாக ரூ. 2 லட்சம் கொடுக்க வைத்தாராம் அமீர். ஒரே ஒரு பாட்டுக்கு இவ்வளவுசம்பளம் இந்தியாவிலேயே வேறு யாரும் வாங்கியதில்லை என்கிறார்கள்.இதற்கிடையே ஜோதிகா-பூமிகா-சூர்யா நடிக்கும் ஜில்லுனு ஒரு காதல் மிக வேகமாகவே வளர்ந்து வருகிறது. படத்தில்ஜோதிகாவுக்கு நடிப்பு என்றால், பூமிகாவுக்கு கிளாமர் கலந்த அசத்தல் வேடமாம்.படத்தை ஒரு இளமை பிக்னிக் மாதிரி உருவாக்கி வருகிறார்களாம்.
தெலுங்கில் இருந்து இந்திப் போய் இப்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக விளங்கும் ராம்கோபால் வர்மாவும்இசைஞானியும் கைகோர்க்கிறார்கள்.
இந்தப் படத்தை தயாரிக்கப் போவது ஜோதிகா. ஹீரோயின் ஜோதிகாவே தான். அப்ப ஹீரோ... வேறு யார் நம்ம சூர்யாவே தான்.
மும்பை அண்டர்வோர்ல்ட்டின் நடந்த, நடக்கும் உண்மைச் சம்பவங்களை அதிரடி ரியலிசத்துடன் கொடுத்து எங்கேயோபோனவர் வர்மா. இதனால் தாதாக்களின் கோபத்துக்கு இலக்காகி இப்போது 24 மணி நேரமும் ஏ.கே-47 துப்பாக்கிகள் தாங்கிய 4பிரைவேட் செக்யூரிட்டிகளுடன் நடமாடி வரும் தில்லான இயக்குனர்.
இவரை வைத்து சூர்யாவை ஹீரோவாக்கி ஒரு ஆக்ஷன் கலக்கல் படத்தை எடுக்க ஆசைப்பட்டாராம் ஜோதிகா. இதைராம்கோபால் வர்மாவுடன் ஜோதிகா சொல்ல, அட சூர்யாவை இயக்கனும்னு நானும் காத்துட்டு இருக்கேனே என்றாராம்.
இதையடுத்து சூர்யாவும் ராம்கோபாலும் பேசி இசைக்கு இளையராஜாவைப் போடுவது என முடிவெடுத்தார்களாம்.
ப்ராஜெக்ட் குறித்த ஆரம்ப பேச்சுவார்த்தை ஜெட் வேகத்தில் முடிந்துவிட, இப்போது கதையை உருவாக்கும் வேலையில்தீவிரமாக இருக்கிறார் வர்மா.
ஜோதிகாவுக்காக தனது உறவினரை வைத்து (சூர்யா தான் பண உதவி என்கிறார்கள்) ஜில்லுனு ஒரு காதல் படத்தை எடுத்து வரும்சூர்யாவுக்கு நன்றிக் கடனாக தனது தயாரிப்பில் ராம்கோபால் வர்மா-இசைஞானி என்ற காம்பினேஷனில் பிரமாண்டமாய் படம்தயாரிக்கிறார் ஜோதிகா.
ராம்கோபாலும் இளையராஜாவும் ஏற்கனவே தெலுங்கில் சிவா என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஆனால், தமிழில்இதுவே முதல் முறை.
இதற்கிடையே சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிக்கும் பருத்தி வீரன் படத்தில் இளையராஜா ஒரு பாடலைப் பாட வேண்டும் எனஇயக்குனர் அமீர் விரும்பினாராம். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. அமீரின் விருப்பத்துக்காக பாட ஒப்புக் கொண்டார்இளையராஜா.
இதையடுத்து அந்த ஒரு பாடலுக்கு சம்பளமாக ரூ. 2 லட்சம் கொடுக்க வைத்தாராம் அமீர். ஒரே ஒரு பாட்டுக்கு இவ்வளவுசம்பளம் இந்தியாவிலேயே வேறு யாரும் வாங்கியதில்லை என்கிறார்கள்.
இதற்கிடையே ஜோதிகா-பூமிகா-சூர்யா நடிக்கும் ஜில்லுனு ஒரு காதல் மிக வேகமாகவே வளர்ந்து வருகிறது. படத்தில்ஜோதிகாவுக்கு நடிப்பு என்றால், பூமிகாவுக்கு கிளாமர் கலந்த அசத்தல் வேடமாம்.
படத்தை ஒரு இளமை பிக்னிக் மாதிரி உருவாக்கி வருகிறார்களாம்.