Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'காக்க காக்க' வந்து 10 வருஷமாச்சாம்!
சென்னை: சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் வந்து 10 வருடமாகியுள்ளது.
அன்புச் செல்வன் என்ற போலீஸ் கேரக்டரில் வந்து அதகளம் செய்திருந்தார் சூர்யா இந்தப் படத்தில்.
இப்படம் நேற்றுதான் வெளியானது போல உள்ளது. ஆனால் அதற்குள் 10 வருடங்களைத் தொட்டு விட்டது காக்க காக்க.
சூர்யாவுக்கு பெரும் பெயர்
காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு மிகச் சிறப்பான பாத்திரம் அமைந்தது. இதனால் அவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
அன்புச்செல்வன் ஐபிஎஸ்
இப்படத்தில் அன்புச்செல்வன் என்ற போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார் சூர்யா.
பாந்தமான ஜோதிகா
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போட்டிருந்தார் ஜோதிகா. பாந்தமான டீச்சர் கேரக்டரில் கலக்கியிருப்பார். அந்த சேலைக்கட்டும், லுக்கும், நிதானமான நடிப்பும் அப்படியே அள்ளிக் கொண்டு போனது.
ஹாரிஸ் ஜெயராஜின் தாலாட்டிய இசை
இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியம்.
வித்தியாசமான ஜீவன்
படத்தின் வில்லனாக வந்த ஜீவன், ஹீரோவாகநடித்துக் கொண்டிருந்த போது இந்தப் படத்துக்காக கொடூரமான வில்லனாக வந்திருந்தார். நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார் ஜீவன்.
நேர்த்தியான இயக்கம்
கெளதம் வாசுதேவ மேனனின் நேர்த்தியான இயக்கம், திரில்லான காட்சிகள், திட்டமிட்ட காட்சியமைப்பு என அனைத்துமே பிரமாதமாக இருந்தது.
போலீஸ் அதிகாரிகளின் பாராட்டு
இந்தப் படம் காவல்துறையினரையும் வெகுவாக கவர்ந்தது. பல போலீஸ் அதிகாரிகள் சூர்யாவையும், கெளதம் மேனனையும் வாய் விட்டுப் பாராட்டினர்.